மேலும் அறிய

பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்! காரணம் என்ன?

சேலம் மாவட்டத்தில் காரணமே இல்லாமல் பல ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி நிறைவடைந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 154 மையங்களில் சுமார் 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வு எழுதினர். இதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் பொருத்தவரை ஆத்தூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாரமங்கலம் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி, சேலம் சாரதா பால மந்திர் மேல்நிலைப் பள்ளி உட்பட நான்கு மையங்களில் விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்! காரணம் என்ன?

இந்த நிலையில் சேலம் மாநகரில் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் அதற்காக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பணிக்கு வந்த ஆசிரியர்கள் திடீரென விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கமாக பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில் தன் மையங்கள் நியமனம் செய்யப்பட்டு வந்ததாகவும் தற்போது வழக்கமான நடைமுறை மாற்றப்பட்டு மையஙகள் நியமிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஆசிரியர்கள் தொலைவிலுள்ள மையங்களுக்கு செல்ல வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், திருமணம், எதிர்பாராத விபத்து, கணவன் அல்லது மனைவி உயிரிழப்பு, முழு உடல் நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு தரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் காரணமே இல்லாமல் பல ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்! காரணம் என்ன?

குறிப்பாக சுற்றுலா செல்வதை கூட காரணமாக காட்டி ஒரு சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினார். தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் இதே நிலை நீடித்தால் அரசு தெரிவித்துள்ள தேதியில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் நாளை முதல் ஆசிரியர்கள் கேட்கும் இடங்களுக்கு மாற்றி தருவதாக உறுதியளித்த பின்னர் மதியத்திற்கு மேல் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திருத்து படுவதாக தெரிவித்தனர். நாளை மாற்றப்படும் இடம் குறித்து இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பின் ஆசிரியர்கள் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget