மேலும் அறிய

மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி - பரபரப்பான சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

ஆட்சியர் அலுவலக நுழைவாயிலுக்குள் வந்து அவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள உம்மளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. இவரது சகோதரர் மணிகண்டன் (மாற்றுத்திறனாளி). இருவரும் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவாயிலுக்குள் வந்து அவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இருவரையும் மீட்டு டவுன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இருவருக்கும் அவர்களின் பெற்றோர் விட்டுச் சென்ற வீடு மற்றும் விவசாய நிலத்தில் பங்கு தராமல், இருவரின் சித்தப்பா மற்றும் பெரியப்பா குடும்பத்தினர் அபகரித்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது. பெற்றோரின் சொத்தில் தங்களுக்கு பங்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருவரும் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி - பரபரப்பான சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

 

மற்றொரு நிகழ்வில் சேலம் மாவட்டம் மாமாங்கம் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா மொத்த வியாபாரிகளிடம் இருந்து வாங்கி வந்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சேலம் கருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பிடிபட்ட சதீஷ்குமாரிடம் கஞ்சா மொத்த வியாபாரிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சதீஷ் குமாருக்கு கஞ்சா விற்பனை செய்த கனகராஜ் என்பவர் உடல்நல பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று கருப்பூர் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த தனது சகோதரரை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் அடித்து அழைத்து சென்றதாக கூறி, கனகராஜியின் சகோதரிகளான உமா, சுகன்யா ஆகிய இருவரும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து காவல்துறையிடம் தனது சகோதரரை விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி முறையிட்டனர். பின்னர் இருவரும் காவல்துறையினர் காலில் விழுந்து கதறிஅழுதனர்.உடனே காவல்துறையினர் இருவரையும் மனு வழங்க ஆட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.

மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி - பரபரப்பான சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அதன்பின் சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் சேலம் மகளிர் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அரசுப் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு சீருடையின் மேல் கோட்டு தயாரிக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயின்ற அரசு மாணவிகளுக்கு பள்ளி சீருடையின் மேல் கோட்டு தைத்துக் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஒரு சீருடைக்கு 35 ரூபாய் வீதம் அரசு நிர்ணயம் செய்தது. இதற்கான பணம் சீருடை தைக்கும் பணியில் ஈடுபட்ட மகளிர் தொழில் கூட்டுறவு சங்க பெண்களுக்கு, வங்கி கணக்குகளில் வழங்கப்படும் என்று தீர்மான பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக்கொண்டு இதுவரை இரண்டு ஆண்டுகளுக்கான பணத்தை தராமல் வருவதால் அதற்கான பணத்தை பெற்று தரும்படி, நூற்றுக்கு மேற்பட்ட தொழில் கூட்டுறவு சங்க பெண் உறுப்பினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த சங்கத்தின் தலைவியாக கௌரி மேனகா என்பவர் இருக்கும் நிலையில் அவரது மாமியார் அதிமுக பிரமுகர் ஜமுனாராணி தலைவர் போல் செயல்பட்டு சங்கத்தின் உறுப்பினர்களை மரியாதை குறைவாக பேசுவதாக குற்றம்சாட்டினர். மேலும் பள்ளி சீருடை மேல் கோட்டு தைப்பதற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Embed widget