மேலும் அறிய

வெகு விமரிசையாக நடந்தது, உலகின் மிகப்பெரிய முருகன் சிலை கும்பாபிஷேக விழா..

முருகன் சிலை மட்டும் 126 அடி உயரத்திலும், அதன் பீடம் 20 அடி உயரத்திலும் என 146 அடியில் முத்துமலை முருகன் சிலை மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். தமிழ் நிலத்துக்கே உரிய வழிபாடாக முருகன் வழிபாடு உள்ளது. முருகனைப் பற்றி குறிப்பிடும் போது, தமிழ் கடவுள் என்றே பக்தர்கள் பெருமிதப்படுகிறார்கள். உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்கள், தங்களது பகுதிகளில் முருகனுக்கு கோயில்கள் கட்டி வழிபடுகின்றனர். அந்த வகையில் மலேசியாவில் 140 அடி உயரத்தில் முருகன் சிலை அமைந்திருக்கும் கோவில் பிரசித்தி பெற்றுள்ளது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய முருகன் சிலையைக் கொண்ட நாடாக இந்தியா தற்போது மாற்றம் பெற்றுள்ளது. 

வெகு விமரிசையாக நடந்தது, உலகின் மிகப்பெரிய முருகன் சிலை கும்பாபிஷேக விழா..

சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஏத்தாப்பூரில் 146 அடி உயரத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முத்துமலை முருகன் என்றழைக்கப்படும் இந்த முருகப் பெருமான் வலது கையால் ஆசீர்வாதம் செய்தபடி மற்றொரு கையில் வேலைத் தாங்கி, மணிமகுடம் சூடி ராஜ அலங்காரத்தில் காட்சியளிப்பது முருக பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 வெகு விமரிசையாக நடந்தது, உலகின் மிகப்பெரிய முருகன் சிலை கும்பாபிஷேக விழா..

முருகன் சிலை மட்டும் 126 அடி உயரத்திலும், அதன் பீடம் 20 அடி உயரத்திலும் என 146 அடியில் முத்துமலை முருகன் சிலை மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. முருகன் சிலையின் கிரீடம் மட்டும் 24 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 85 அடி உயரத்தில் வேல், 16 அடி சுற்றளவில் மாலை உள்ளது. முருகன் சிலையின் 60 அடி உயர இடுப்பு பகுதியில்ல 10 பேர் தியானம் செய்யும் மண்டப அறையும் உள்ளது. இங்குள்ள வேல் மீது ஊற்றப்படும் பால், அறுபடை கோவிலின் மூலவருக்கு சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலை உருவாக்க 400 டன் இரும்பு, 25 ஆயிரம் மூட்டை சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள முருகன் சிலையை வடிவமைத்த ஸ்தபதி தியாக ராஜன் என்பவரே, இந்த சிலையையும் உருவாக்கியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும்.  

வெகு விமரிசையாக நடந்தது, உலகின் மிகப்பெரிய முருகன் சிலை கும்பாபிஷேக விழா..

கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கிய உலகின் மிகப்பெரிய முருகன் சிலை கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் கடந்த ஓராண்டாக நடந்து வந்த இந்தப் பணி தற்போது நிறைவடைந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. யாக சாலை பூஜைக்குப் பின்னர் சுவாமியின் திருமேனியில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது.

வெகு விமரிசையாக நடந்தது, உலகின் மிகப்பெரிய முருகன் சிலை கும்பாபிஷேக விழா..

இக்கோவிலில் இனி நாள் தோறும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.    உலகின் மிகப்பெரிய  முருகன் சிலையாக உருவெடுத்துள்ள முத்துமலை முருகன் கோவில் மகா கும்பாஷேக விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். உலகின் மிகப்பெரிய முருகன் சிலை கொண்ட நாடாக இந்தியா மாறியிருப்பது முருக பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget