மேலும் அறிய

Agaya Gangai Falls: ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்.. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, முட்டல் அருவியில் குளிக்க தடை

கடுமையான குளிர் நிலவி வருவதால், மலை வாழ் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு, விவசாய பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலையில் பலத்த மழை பெய்து வருவதால், அனைத்து அருவிகளிலும் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடந்த 2 நாட்களாக, தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், அங்குள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் முழுவதும் கோவிலூர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருகில் நெருங்க முடியாத அளவிற்கு தண்ணீர் வேகமாக கொட்டுகிறது. மழையின் வனப்பகுதி காரணமாக வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் அதிகளவில் ஓடுகிறது. இதன் காரணமாக மாசிலா அருவி, நம் அருவி, சந்தன பாறை அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிக்கு செல்லும் பாதைகள் வனத்துறையினரால் மூடப்பட்டுவிட்டது. இதனால் கொல்லிமலையில் உள்ள அருவிகளில் குளிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.

Agaya Gangai Falls: ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்.. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, முட்டல் அருவியில் குளிக்க தடை

தொடர் மழையின் காரணமாக கொல்லிமலை மலைவாழ் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது. ஐந்து நாடு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள காட்டாறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் நின்று விட்டது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. கடுமையான குளிர் நிலவி வருவதால், மலை வாழ் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு, விவசாய பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சோளக்காடு, தெம்பளம், திண்டுப்பட்டி உள்ளிட்ட பழச்சந்தைகளில் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள், பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் இருந்து செல்லும் தண்ணீர், திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள புளியஞ்சோலை அடிவாரப் பகுதியில் உள்ள அருவிக்கு செல்வதால், அங்கும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அங்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

Agaya Gangai Falls: ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்.. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, முட்டல் அருவியில் குளிக்க தடை

இதைப்போல், சேலம் மாவட்டம், ஆத்தூர் வனக்கோட்டத்தில் உள்ள கல்லாநத்தம் கிராமம், ஆனைவாரி முட்டலில் அருவி, ஏரி இருக்கிறது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியை சூழல் சுற்றுலா மையமாக அறிவித்து வனத்துறை பராமரித்து வருகிறது. ஆண்டு முழுவதும் முட்டல் சூழல் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அருவில் குளிப்பதும், ஏரியில் படகு சவாரி செய்வதுமாக இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், முட்டல் அருவியில் நீர்வ ரத்து அதிகரித்து, பெரும் வெள்ளமென பாய்ந்தோடுகிறது. இதனால், ஏரியும் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக, முட்டல் அருவிக்கும், ஏரிக்கும் வர தடை விதித்து, ஆத்தூர் மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியசேவியர் அறிவித்துள்ளார். முட்டல் அருவில் அதிகளவு வெள்ளநீர் வருவதால், சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை, யாரும் முட்டல் சூழல் சுற்றுலா மையத்திற்கும், அருவியில் குளிக்கவும் வர வேண்டாம் என அறிவிப்பு பலகையை முன்பகுதியில் வனத்துறையினர் வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Embed widget