Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (03.05.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது..
Salem Power Shutdown (03.05.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஒரு வாரமாக வெயிலின் அளவு 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. நேற்றைய தினம் சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பகல் நேரங்களில் வெப்ப காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இன்னும் மூன்று நாட்களில் அக்னி வெயில் வர உள்ள நிலையில், அக்னிக்கு முன்பாகவே வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மதிய நேரங்களில் பொதுமக்கள் குளிர்பானங்களை தவிர்த்து இளநீர், தர்பூசணி, நொங்கு உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கோடை காலங்களில் மாதாந்திர பராமரிப்பிற்கான மின்தடையை தமிழ்நாடு மின்சார வாரியம் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 03-05-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
நெத்திமேடு, மெய்யனூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை.
சிங்காரப்பேட்டை, சந்தைப்பேட்டை, நெத்திமேடு, செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, 5 ரோடு, பேர்லண்ட்ஸ், சொர்ணபுரி, மெய்யனூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
உடையாபட்டி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை.
தியாகி நடேசன் தெரு 1, 2, 3, 4, ராமநாதபுரம், காந்தி மைதானம், கிருஷ்ணன் புதூர், சுந்தர கணபதி தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
இன்றைய மின்தடை பகுதிகள்:
நெத்திமேடு, மெய்யனூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை.
டி.எம்.ஜி சாலை, வி.சி சாலை, மூலப்பிள்ளையார் கோவில், பால் மார்க்கெட், பள்ளப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மூன்று ரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.





















