மேலும் அறிய

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் சிறையில் இருந்து வரும் கறி கோழி.. அது எப்படிங்க சார்..!

கோழிகளை மொத்தமாக வாங்க விரும்புவோர்கள் 0427-2403551, 0427-2900048 என்ற எண் அல்லது cpslm.pcsd.gov.in என்ற மின்னஞ்சலிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் மற்றும் 138 கிளை சிறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த சிறைகளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு கைதிக்கும் தல 150 கிராம் சிக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கறிக்கோழியை வெளியில் இருந்து வாங்கி  கைதிகளுக்கு சமைத்து வழங்கப்பட்டு வந்தது .

சிறை கோழி பண்ணை:

இந்த நிலையில், சிறை கைதிகளுக்கு தரமான கறிக்கோழிகளை வழங்கும் வகையில் தேவையான கறிக்கோழியை அந்தந்த மத்திய சிறைகளிலேயே வளர்க்க முடிவு செய்தனர். அதன்படி சேலம், கோவை, திருச்சி, பாளையங்கோட்டை, மதுரை, சென்னை புழல் உள்பட மத்திய சிறைகளிலும் கோழி பண்ணை தொடங்கப்பட்டுள்ளது. கோழி வளர்க்க கைதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் 9 மத்திய சிறைகளிலும் கோழி வளர்ப்பு தொடங்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் சிறையில் இருந்து வரும் கறி கோழி.. அது எப்படிங்க சார்..!

4,500 கோழி குஞ்சுகள் வளர்ப்பு:

இதன் ஒரு பகுதியாக, சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் சேலம் மத்திய சிறையில் 4 ஆயிரத்து 500 கோழி குஞ்சுகள் வளர்க்கப்பட்டன. அந்த கோழி குஞ்சுகள் தற்போது வளர்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதிகளுக்கு அந்த கோழி கறி வழங்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள கறிகளை பொது மக்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கு விற்பனை:

அதன் பேரில் பொது மக்களுக்கான கறிக்கோழி விற்பனை மையத்தை சேலம் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் வினோத் திறந்து வைத்தார். வெளியில் ஒரு கிலோ கறி 200 முதல் 250 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் அங்கு 195 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனை பொது மக்கள் வாங்கி சென்றனர். மேலும் மொத்தமாக கறிக்கோழி தேவைப்படுவோர் 24 மணி நேரமும் முன் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று சிறை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் சிறையில் வளர்க்கப்படும் கறிக்கோழிகள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 14 சிறை கைதிகளுக்கும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் சிறையில் இருந்து வரும் கறி கோழி.. அது எப்படிங்க சார்..!

ஆன்லைன் ஆர்டர்:

இதுகுறித்து சேலம் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் வினோத் கூறுகையில், சேலம் மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளனர். இங்குள்ள கைதிகளுக்கு வாரம் தோறும் இரண்டு முறை கோழி கறி ஒருவருக்கு 150 கிராம் விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. முன்பு சந்தையில் இருந்து கோழி கறிகள் வாங்கப்பட்டு கைதிகளுக்கு சமைத்து வழங்கப்படும். ஆனால் தற்போது தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஒன்பது மத்திய சிறைகளிலும் கோழிப் பண்ணைகள் அமைத்து அதன் மூலம் வளர்க்கப்பட்ட கோழிகளை கறியாக கைதிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் சேலம் மத்திய சிறையில் கோழிப் பண்ணை அமைக்கப்பட்டு 4,500 கோழி குஞ்சுகள் வளர்க்கப்பட்டது. கோழிக்குஞ்சுகள் வளர்ந்து கறிக் கோழியாக உள்ளது. இந்தக் கோழிகளை மத்திய சிறை மற்றும் கிளைச் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு வாரம் இரு முறை உணவுடன் வழங்கப்படுகிறது. கைதிகளின் உணவுக்கு பயன்படுத்தும் கோழிகளை தவிர்த்து மீதம் உள்ள கோழிகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ கறிக்கோழி 195 ரூபாய்க்கும், ஒரு கிலோ உயிருடன் கோழி 165 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட வருகிறது. கோழிகளை ஆர்டர் செய்து மொத்தமாக வாங்க விரும்புவோர்கள் 0427-2403551, 0427-2900048 என்ற எண் அல்லது cpslm.pcsd.gov.in என்ற மின்னஞ்சலிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம் என கூறினார்.

தலைப்பு செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
செம வாசம்! சேலத்தில் ஆடிப் பிறப்பையொட்டி தேங்காய் சுட்ட மக்கள்! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
செம வாசம்! சேலத்தில் ஆடிப் பிறப்பையொட்டி தேங்காய் சுட்ட மக்கள்! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget