மேலும் அறிய

கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய டிஐஜி; கைதியிடம் சிபிசிஐடி விசாரணை

ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்திய விவகாரம் தொடர்பாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறை கைதி சிவக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் அங்கு வேலூர் சிறை டிஐஜி வீட்டு வேலைக்கு சென்றதாகவும், அங்கிருந்த ரூபாய். 4.25 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதாகவும் கூறப்படுகிறது. விசாரணை நடத்தியபோது, மண்ணில் புதைத்து வைத்திருந்த பணத்தை கண்டு பிடித்து எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவகுமாரின் தாய், தனது மகன் திருடிவிட்டான் என கூறி அவனை சித்ரவதை செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக வேலூர் தலைமை நீதித்துறை நடுவர், சிறையில் சென்று விசாரணை நடத்தினார். அதன் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி அரசுக்கு வரும் 17 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய டிஐஜி; கைதியிடம் சிபிசிஐடி விசாரணை

இதையடுத்து சென்னை சிபிசிஐடி போலீசார், வேலூர் சரக டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் சூப்பிரெண்ட் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள் குமரன், பிஎஸ்ஓ ராஜூ, ஓசிடீமை சேர்ந்த ரசித், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் போலீசார் சரஸ்வதி, செல்வி, வார்டன்கள் சுரேஷ், சேது என 14 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 14 பேரும் முதற்கட்டமாக துறைரீதியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. இந்தநிலையில், அவர்களில் சிலர் தலைமறைவாகிவிட்டனர். இதற்கிடையில் வேலூர் சிறையில் இருந்த கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய டிஐஜி; கைதியிடம் சிபிசிஐடி விசாரணை

இந்த நிலையில் வேலூர் மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ள கைதி சிவக்குமாரிடம் இன்று காலை சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர் சசிதர் மற்றும் சென்னிஸ், இளங்கோ, காவல் ஆய்வாளர் இந்திரா உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி அவரின் வாக்குமூலம் முழுவதையும் வீடியோ பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு முழு விசாரணை அறிக்கையை நீதிமன்ற விசாரணையின் போது தாக்கல் செய்யப்பட இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget