மேலும் அறிய

சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் - மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி தர கோரிக்கை

’’பல மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை 5,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் நிலையில் தமிழ்நாட்டில் மிகவும் குறைந்த தொகை மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது’’

மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகையாக 40 சதவீதம் ஊனமுற்றவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாயும், 75 சதவீதம் ஊனமுற்றவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாற்றுத் திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் - மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி தர கோரிக்கை

இந்த போராட்டத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மேலும், இதே போன்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் ஆகிய இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் - மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி தர கோரிக்கை

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சிறு மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் விலைவாசி உயர்வினால் மிகுந்த சிரமத்தை மாற்றுத்திறனாளிகள் அனுபவித்து வருகிறோம். பலருக்கு பல நன்மையை செய்து கொண்டிருக்கும் அரசாங்கம் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. பல மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை 5,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் நிலையில் தமிழ்நாட்டில் மிகவும் குறைந்த தொகை மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தக்காளி முதல் அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை வரை உயர்ந்துள்ளதால் மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்தில் உள்ளோம். திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தங்களுக்கு உதவ வேண்டும் என வெங்கடாசலம் கேட்டுக் கொண்டார்.

சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் - மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி தர கோரிக்கை

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாற்றுத் திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget