மேலும் அறிய

சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

ஓட்டுநர் வெற்றிவேலின் கவனக்குறைவே பேருந்து விபத்துக்கு காரணம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது

சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து, சங்ககிரி அருகே உள்ள அக்கம்மாபேட்டை பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

நேற்று மதியம் 2 மணியளவில் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தை அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (41) என்பவர், ஓட்டிச் சென்றார். மதியம் 2.30 மணிக்கு சங்ககிரி புதிய பஸ் நிலையம் அருகே, அக்கம்மாபேட்டை என்ற இடத்தில் பேருந்து சென்ற போது. எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் உள்ள தென்னை மரத்தில் மோதி, 10அடி ஆழமுள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. நேற்று முகூர்த்த நாள் என்பதால், 40க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணித்தனர் பேருந்து விபத்துக்குள்ளானதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறை, ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அவ்வழியே வந்த வாகனங்களில் அனுப்பி வைத்தனர். 

சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில், சங்ககிரியைச் சேர்ந்த மேளம் வாசிக்கும் கலைஞர் கணேசன் (71) பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த வனிதா (40), ஊத்தங்கரை பழனியப்பன் (71), சேலம் கவிதா (47), ஈரோடு சித்ரா (28), அனிதா (23), சேலம் வைரமணி (38), தர்மபுரி ராஜா (40), துரை( 52), சேலம் நடராஜ், தர்மபுரி ராமலிங்கம் (54), வெப்படை காசி (45) உட்பட 40க்கும் மேற்பட்டோர் சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, கோவை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான பேருந்தை 2 பொக்லைன்கள் மூலம் மீட்டு காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனிடையே, படுகாயத்துடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 45 வயது ஆண், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்கள் யார்? எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், சங்ககிரி டிஎஸ்பி ஆரோக்கியராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சங்ககிரி துணை தாசில்தார்கள் ராஜேந்திரன், ஜெயகுமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் மீட்பு பணியை துரிதப்படுத்தினர். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த முத்துகுமரன் (30) என்பவர், பேருந்தின் டிரைவர் வெற்றிவேல் கவன குறைவாக பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக புகாரளித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

கட்டணம் செலுத்துங்க! தனியா பேசலாம்! சமூக வலைதளங்களில் அழைப்பு: 12 பேர் மீது வழக்கு!
கட்டணம் செலுத்துங்க! தனியா பேசலாம்! சமூக வலைதளங்களில் அழைப்பு: 12 பேர் மீது வழக்கு!
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
அரசு கேபிள் டிவி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதா? ஆபரேட்டர்கள் திடீர் அச்சம்
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு! ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Embed widget