மேலும் அறிய

Pon Manikavel: இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்

500-க்கும் மேற்பட்ட விக்ரகங்கள் திருட்டுப் போயுள்ளன. இவ்வளவு குற்றங்கள் நடந்தும், கோவில் பாதுகாப்பு படையினருக்கு பல கோடி செலவு செய்தும் இதுவரை எந்த குற்றமும் கண்டுபிடிக்கவில்லை என குற்றச்சாட்டு.

சேலத்தில் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, கோவில் பாதுகாப்பு படைக்கு 2018 வரை ரூ.13 கோடி செலவானது. மொத்தமாக இதுவரை ரூ.172 கோடி செலவாகியுள்ளது. இந்த பணம் மக்கள் வரிப்பணம். மக்கள் வரிப்பணத்தில் இருந்து காவல்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்காமல், அறநிலையத்துறை மாதத்திற்கு ரூ.55 கோடி வரியாக வசூலிக்கிறது. அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை அனைவருக்கும் கோவிலுக்கு வரியாக போடப்படும் பணத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இது உச்சகட்ட அநியாயம். மேலும் மோசடியாக அதிமுக மற்றும் திமுக அரசுகள் கோவில் கணக்கு தணிக்கை பார்க்க ரூ.228 கோடி செலவிடப்பட்டுள்ளது. தனிமனிதர் தவறு செய்தால் தண்டிக்கும்போது அரசு குற்றம் இழைக்கும்போது என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினர்.

கோவில் பாதுகாப்பு படையினருக்கு இதில் இருந்து ஊதியம் வழங்கப்படவில்லை. காவல் துறையினரையும் முன்னாள் ராணுவத்தினரையும் இணைத்து அறநிலையத்துறையில் இருக்கும் புத்திசாலிகள் திருக்கோவில் பாதுகாப்பு படையை உருவாக்கினர். 1022 உண்டியல் திருட்டுகள், 248 கோவில் விக்ரக திருட்டுகள் நடந்துள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட விக்ரகங்கள் திருட்டுப் போயுள்ளன. இவ்வளவு குற்றங்கள் நடந்தும், கோவில் பாதுகாப்பு படையினருக்கு பல கோடி செலவு செய்தும் இதுவரை எந்த குற்றமும் கண்டுபிடிக்கவில்லை. 2015 முதல் 2018 வரை கோவில் பாதுகாப்பு படையினருக்கு ரூ.172 கோடி செலவு செய்தும் எந்த பலனும் இல்லை. பூஜ்ஜிய அளவிற்கு கூட பிரயோஜனம் இல்லை. எந்தவித பலனும் இல்லாத கோவில் பாதுகாப்பு படையை கலைக்க வேண்டும். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்பதால் இதை செய்ய வேண்டும் என்றார்.

கோவில் பணத்தை இந்து சமய அறநிலையத்துறை சூறையாடி வருகிறது. உடனடியாக இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும். அறமற்ற துறையாக அறநிலையத்துறை உள்ளது. இறைவன் முன்பு தலையை குனிந்து நாணி நிற்க வேண்டும். கோவில் பாதுகாப்பு படையில் தற்போது முன்னாள் காவல்துறையினரை பணியில் சேர்க்கிறார்கள். அவர்கள் மது அருந்தி விட்டு பணியில் ஈடுபடுகின்றனர். திமுக அதிமுக என இரண்டு அரசாங்கமும் சேர்ந்து கோவில் பாதுகாப்பு படையைப் பொறுத்தவரை செயலற்ற நிலையில் உள்ளனர் என்றார்.

Pon Manikavel: இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்

சேலம் ஆறகளூரில் உள்ள கோவிலை சென்று பார்த்து வந்தேன். மகதை மண்டலமாக அந்த பகுதி அறியப்படுகிறது. 3-ம் குலோத்துங்க சோழன் ஆட்சி செய்துள்ளார். 1190-களில் கட்டப்பட்டுள்ள அந்த கோவிலை அரசு புறக்கணித்து அதன் பழமையை அழித்து நவீனமாக்கி விட்டது. புத்தி குன்றியவர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் இருந்ததன் விளைவு இப்படி ஆகி விட்டது. அந்த கோவிலை பாதுகாக்கப்பட்ட புராதனக் கோவிலாக மாற்றி அறிவிக்க வேண்டும். ராஜராஜ சோழன் காலத்தில் தமிழகம் முழுவதும் 50 கோவில்களுக்கு மேலாக கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைத் தவிர மற்ற கோவிலை புராதனக் கோவிலாக அறிவிக்காததற்கு கோவிலில் வருவாய் ஈட்டமுடியாது என்பதே காரணம்.

திருப்பணிக்கு 10 வகையான நிதிகள் உள்ளது திருப்பணிக்கு பொதுமக்களில் வசதியானவர்கள் கொடுக்கிறார்கள். அவர்களிடம் பணம் வாங்கி திருப்பணி செய்துவிட்டு, கோவில் நிதியில் கணக்கு காட்டி விடுகிறார்கள். கோவில் அர்ச்சகர்களை கோவில் ஊழியராக காட்டாமல், அதிகாரிகள் மட்டும் தங்களை கோவில் ஊழியர்களாக காட்டிக் கொள்கிறார்கள். இதனால் மாதத்திற்கு ரூ.700 மட்டுமே அர்ச்சகருக்கு ஊதியமாக கிடைக்கிறது. ஆனால் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கிடைக்கிறது. கணக்கு பார்க்கும் அறநிலையத்துறைக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது. கோவிலை பாதுகாத்து உழைப்பவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை.

அதிகாரத்திற்கு செல்வதில் எனக்கு விருப்பமில்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சமூகப் பணிக்கு வரவேண்டும். பொய் வழக்கு போடுவார்கள் என பயப்படுகிறார்கள். அந்த பயம் தேவையில்லை. என் மீது சிபிஐ வழக்குப் போட்டது. அது மண்ணாங்கட்டி விளக்குமாறுக்கு சமமானது. நான் பயப்படவில்லை. 2 ஆயிரம் வழக்குகளை கூட எதிர்கொள்வேன். நான் தவறு செய்யவில்லை. கோவில் பணம் விரயமாவதை அறநிலையத்துறையினர் மறுக்க முடியாது. மூலவருக்கு கிழிந்த துணிகளை போடுவதால் பெருச்சாளி ஓடும் நிலை உள்ளது. அரசுக்கு எதிர்ப்பான தகவலை சொல்ல பயப்படுகிறார்கள். போலீஸ் பொய் வழக்கு போடுவார்கள் என பயப்படுகிறார்கள். பொய் வழக்கை எதிர்கொள்ள ஒரு நிதி உருவாக்கி பேசப் போகிறேன் என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு  வழங்க கோரிக்கை!
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை!
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Amarnath Ramakrishna: கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
Embed widget