மேலும் அறிய

Pon Manikavel: இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்

500-க்கும் மேற்பட்ட விக்ரகங்கள் திருட்டுப் போயுள்ளன. இவ்வளவு குற்றங்கள் நடந்தும், கோவில் பாதுகாப்பு படையினருக்கு பல கோடி செலவு செய்தும் இதுவரை எந்த குற்றமும் கண்டுபிடிக்கவில்லை என குற்றச்சாட்டு.

சேலத்தில் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, கோவில் பாதுகாப்பு படைக்கு 2018 வரை ரூ.13 கோடி செலவானது. மொத்தமாக இதுவரை ரூ.172 கோடி செலவாகியுள்ளது. இந்த பணம் மக்கள் வரிப்பணம். மக்கள் வரிப்பணத்தில் இருந்து காவல்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்காமல், அறநிலையத்துறை மாதத்திற்கு ரூ.55 கோடி வரியாக வசூலிக்கிறது. அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை அனைவருக்கும் கோவிலுக்கு வரியாக போடப்படும் பணத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இது உச்சகட்ட அநியாயம். மேலும் மோசடியாக அதிமுக மற்றும் திமுக அரசுகள் கோவில் கணக்கு தணிக்கை பார்க்க ரூ.228 கோடி செலவிடப்பட்டுள்ளது. தனிமனிதர் தவறு செய்தால் தண்டிக்கும்போது அரசு குற்றம் இழைக்கும்போது என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினர்.

கோவில் பாதுகாப்பு படையினருக்கு இதில் இருந்து ஊதியம் வழங்கப்படவில்லை. காவல் துறையினரையும் முன்னாள் ராணுவத்தினரையும் இணைத்து அறநிலையத்துறையில் இருக்கும் புத்திசாலிகள் திருக்கோவில் பாதுகாப்பு படையை உருவாக்கினர். 1022 உண்டியல் திருட்டுகள், 248 கோவில் விக்ரக திருட்டுகள் நடந்துள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட விக்ரகங்கள் திருட்டுப் போயுள்ளன. இவ்வளவு குற்றங்கள் நடந்தும், கோவில் பாதுகாப்பு படையினருக்கு பல கோடி செலவு செய்தும் இதுவரை எந்த குற்றமும் கண்டுபிடிக்கவில்லை. 2015 முதல் 2018 வரை கோவில் பாதுகாப்பு படையினருக்கு ரூ.172 கோடி செலவு செய்தும் எந்த பலனும் இல்லை. பூஜ்ஜிய அளவிற்கு கூட பிரயோஜனம் இல்லை. எந்தவித பலனும் இல்லாத கோவில் பாதுகாப்பு படையை கலைக்க வேண்டும். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்பதால் இதை செய்ய வேண்டும் என்றார்.

கோவில் பணத்தை இந்து சமய அறநிலையத்துறை சூறையாடி வருகிறது. உடனடியாக இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும். அறமற்ற துறையாக அறநிலையத்துறை உள்ளது. இறைவன் முன்பு தலையை குனிந்து நாணி நிற்க வேண்டும். கோவில் பாதுகாப்பு படையில் தற்போது முன்னாள் காவல்துறையினரை பணியில் சேர்க்கிறார்கள். அவர்கள் மது அருந்தி விட்டு பணியில் ஈடுபடுகின்றனர். திமுக அதிமுக என இரண்டு அரசாங்கமும் சேர்ந்து கோவில் பாதுகாப்பு படையைப் பொறுத்தவரை செயலற்ற நிலையில் உள்ளனர் என்றார்.

Pon Manikavel: இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்

சேலம் ஆறகளூரில் உள்ள கோவிலை சென்று பார்த்து வந்தேன். மகதை மண்டலமாக அந்த பகுதி அறியப்படுகிறது. 3-ம் குலோத்துங்க சோழன் ஆட்சி செய்துள்ளார். 1190-களில் கட்டப்பட்டுள்ள அந்த கோவிலை அரசு புறக்கணித்து அதன் பழமையை அழித்து நவீனமாக்கி விட்டது. புத்தி குன்றியவர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் இருந்ததன் விளைவு இப்படி ஆகி விட்டது. அந்த கோவிலை பாதுகாக்கப்பட்ட புராதனக் கோவிலாக மாற்றி அறிவிக்க வேண்டும். ராஜராஜ சோழன் காலத்தில் தமிழகம் முழுவதும் 50 கோவில்களுக்கு மேலாக கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைத் தவிர மற்ற கோவிலை புராதனக் கோவிலாக அறிவிக்காததற்கு கோவிலில் வருவாய் ஈட்டமுடியாது என்பதே காரணம்.

திருப்பணிக்கு 10 வகையான நிதிகள் உள்ளது திருப்பணிக்கு பொதுமக்களில் வசதியானவர்கள் கொடுக்கிறார்கள். அவர்களிடம் பணம் வாங்கி திருப்பணி செய்துவிட்டு, கோவில் நிதியில் கணக்கு காட்டி விடுகிறார்கள். கோவில் அர்ச்சகர்களை கோவில் ஊழியராக காட்டாமல், அதிகாரிகள் மட்டும் தங்களை கோவில் ஊழியர்களாக காட்டிக் கொள்கிறார்கள். இதனால் மாதத்திற்கு ரூ.700 மட்டுமே அர்ச்சகருக்கு ஊதியமாக கிடைக்கிறது. ஆனால் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கிடைக்கிறது. கணக்கு பார்க்கும் அறநிலையத்துறைக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது. கோவிலை பாதுகாத்து உழைப்பவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை.

அதிகாரத்திற்கு செல்வதில் எனக்கு விருப்பமில்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சமூகப் பணிக்கு வரவேண்டும். பொய் வழக்கு போடுவார்கள் என பயப்படுகிறார்கள். அந்த பயம் தேவையில்லை. என் மீது சிபிஐ வழக்குப் போட்டது. அது மண்ணாங்கட்டி விளக்குமாறுக்கு சமமானது. நான் பயப்படவில்லை. 2 ஆயிரம் வழக்குகளை கூட எதிர்கொள்வேன். நான் தவறு செய்யவில்லை. கோவில் பணம் விரயமாவதை அறநிலையத்துறையினர் மறுக்க முடியாது. மூலவருக்கு கிழிந்த துணிகளை போடுவதால் பெருச்சாளி ஓடும் நிலை உள்ளது. அரசுக்கு எதிர்ப்பான தகவலை சொல்ல பயப்படுகிறார்கள். போலீஸ் பொய் வழக்கு போடுவார்கள் என பயப்படுகிறார்கள். பொய் வழக்கை எதிர்கொள்ள ஒரு நிதி உருவாக்கி பேசப் போகிறேன் என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Anbil Mahesh intermediate teachers: இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.! வெளியாகப்போகும் அறிவிப்பு- அன்பில் மகேஷ் அதிரடி
இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.! வெளியாகப்போகும் அறிவிப்பு.? அன்பில் மகேஷ் அதிரடி
தவெக-பாஜக கூட்டணி சாத்தியமா? திமுக அமைச்சர்கள் குறித்து அருண்ராஜின் பரபரப்பு பதில்!
தவெக-பாஜக கூட்டணி சாத்தியமா? திமுக அமைச்சர்கள் குறித்து அருண்ராஜின் பரபரப்பு பதில்!
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Embed widget