Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் திறப்பு 40,000 கன அடியாக அதிகரிப்பு ; தர்மபுரி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை! இன்றைய நீர் நிலவரம் இதுதான்...
Mettur Dam : மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு நேற்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 24,000 கனஅடியிலிருந்து 30,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 18,615 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 19,286 கனஅடியாகவும், மதியம் 24,735 கன அடியாகவும், மாலை 29,423 கனஅடியாகவும் அதிகரித்தது. இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு நேற்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 24,000 கனஅடியிலிருந்து 30,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 22,100 கனஅடி, 16 கண் மதகு வழியாக 7,900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 119.63 அடியாகவும், நீர் இருப்பு 92.88 டிஎம்சியாக இருந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 28 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 50 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. நீர்வரத்து உயர்வு காரணமாக ஒகேனக்கல் காவிரியிலும், அருவிகளிலும் குளிக்க, பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் அறிவித்த தடை தொடர்ந்து அமலில் உள்ளது.
ஒகேனக்கல் : நீர்வரத்து 43,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரியாற்றில், நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 43,000 கன அடியாக அதிகரித்துள் ளது. தொடர்ந்து, ஒன்பதாவது நாளாக இங்கு குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதி களில், தென்மேற்கு பருவ மழை பெய்வதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. இதனால், அங் குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளதால், அணை பாதுகாப்பு கருதி அங்கு வரும் தண்ணீர், அப்படியே காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு, 20,000 கன அடி யாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணிக்கு, 34,000 கன அடியாக அதிகரித்தது. அது மேலும் அதிகரித்து மாலை, 5 மணிக்கு, 43,000 கன அடியாக வந்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, மெயின்பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நீர்வரத்து அதிகரிப்பால், ஒன்பதாவது நாளாக ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தர்மபுரி மாவட்டத்தில் தடை நீடிக்கிறது. சுற்றுலா வாகனங்களை மடம் சோதனை சாவடியில் போலீசார் திருப்பி அனுப்புவதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பு கின்றனர்.





















