மேலும் அறிய

கோவி.செழியன் தலைமையில் தருமபுரியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு

தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் தலைவர் கோவி.செழியன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தருமபுரி மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்ற மனுக்கள் குழு களஆய்வுக்கு பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் பல்வேறு துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு 7 இலட்சத்து 91 ஆயிரத்து 580 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் அரசு கொறடா முனைவர் கோ.வி. செழியன் பேட்டி அளித்தார்.

கோவி.செழியன் தலைமையில் தருமபுரியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு
 
தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் தலைவர் கோவி.செழியன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வினை காலை ஒகேனக்கலில் தொடங்கி,  பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை, வெள்ளாளப்பட்டி ஏரி, சரத்குமார் நதி, இலக்கியம்பட்டி ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்பொழுது ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் பயணம் செய்து, அருவிகளை கண்டு ரசித்தனர். இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக இருக்கும் பொழுது சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆனால் மெயின் அருவிக்கு செல்கின்ற நடைபாதையை உயரத்தை அதிகரித்து, 35 ஆயிரம் கனஅடி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியினை கண்டு ரசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா தொழிலாளர்கள் சார்பில் பேரவை மனுக்கள் குழுவினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
 
இதனைத் தொடர்ந்து பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றனர். மேலும், தருமபுரி அடுத்த வெள்ளாளப்பட்டி அருகே கிராம மக்கள் ஒன்றிணைந்து நீரேற்று மூலம் ஏரியை நிரப்பி வருகின்றனர். இந்த ஏரியையும் இந்த சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து சனத்குமார் நதி மற்றும் இலக்கியம்பட்டி ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறுகின்ற பகுதிகளையும், சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். 

கோவி.செழியன் தலைமையில் தருமபுரியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு
 
இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குழு தலைவர் மாவட்ட அளவில் பொது மக்கள் 108 மனுக்கள் அளித்துள்ளதாகவும், பல்வேறு மனுக்கள் ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளதாகவும், அதில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாவும், மாவட்ட நிர்வாகத்தால் களஆய்வு செய்து முதல்வருக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கபட்டுள்ளது என்றும், இலவச பட்டா வேண்டி அனுப்பிய மனுக்களை பரிசீலித்து அவர்களுக்கு பட்டா வழங்பட்டதோடு, பல்வேறு துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு 7 இலட்சத்து 91 ஆயிரத்து 580 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டுள்ளதாக குழுவின் தலைவர் அரசு கொறடா முனைவர் கோ.வி. செழியன் தெரிவித்தார்.
 
இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டமன்ற செயலாளர் சீனிவாசன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன், கிரி, ராமச்சந்திரன், கோவிந்தசாமி, உள்ளிட்ட குழுவினர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மனுதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Embed widget