மேலும் அறிய

பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2.5 கோடி முறைகேடு: புகார் அளித்த மாணவர்களிடம் விசாரணை

புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை வரும் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு உத்தரவு.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் ரூ.2.5 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரில், புகார் தெரிவித்த மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் தீன தயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா திட்டத்தின் கீழ் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டு வந்தது. இந்தத் திறன் மேம்பாட்டு பயிற்சியில் ரூ. 2.5 கோடி முறைகேடு நடந்ததாக இத்திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் தேசிய பழங்குடியினர், ஆதிதிராவிடர் நல ஆணையத்திடம் புகார் அளித்தனர். 

பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2.5 கோடி முறைகேடு: புகார் அளித்த மாணவர்களிடம் விசாரணை

இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல், இத்திட்டத்தின் பொறுப்பாளர் சசிகுமார் உள்ளிட்ட பேராசிரியர்கள் சிலர் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மாணவர்கள் அளித்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை வரும் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் புகார் அளித்த மாணவர்கள் 13 பேரும் முறைகேடு தொடர்பான ஆவணங்களுடன் சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு முறைப்படி அழைப்பாணை விடுக்கப்பட்டது. 

பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2.5 கோடி முறைகேடு: புகார் அளித்த மாணவர்களிடம் விசாரணை

அதன் பேரில் 11 மாணவர்கள் இன்றைய தினம் சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சூரமங்கலம் உதவி ஆணையாளர் 11 மாணவர்களிடம் கூட்டு விசாரணை நடத்தினர். பின்னர் ஒவ்வொரு மாணவர்களாக தனித்தனியே சூரமங்கலம் உதவி ஆணையாளர் விசாரணை நடத்தினார். பெரியார் பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவர்களிடம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது.

அனைத்து நிலை அலுவலர்களிடமும் விசாரணை 

மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முழுவதும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புகாருக்குள்ளான பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல் மற்றும் இத்திட்டத்தில் பணிபுரிந்த அனைத்து நிலை அலுவலர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என சேலம் மாநகரக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
Embed widget