மேலும் அறிய

பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2.5 கோடி முறைகேடு: புகார் அளித்த மாணவர்களிடம் விசாரணை

புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை வரும் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு உத்தரவு.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் ரூ.2.5 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரில், புகார் தெரிவித்த மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் தீன தயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா திட்டத்தின் கீழ் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டு வந்தது. இந்தத் திறன் மேம்பாட்டு பயிற்சியில் ரூ. 2.5 கோடி முறைகேடு நடந்ததாக இத்திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் தேசிய பழங்குடியினர், ஆதிதிராவிடர் நல ஆணையத்திடம் புகார் அளித்தனர். 

பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2.5 கோடி முறைகேடு: புகார் அளித்த மாணவர்களிடம் விசாரணை

இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல், இத்திட்டத்தின் பொறுப்பாளர் சசிகுமார் உள்ளிட்ட பேராசிரியர்கள் சிலர் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மாணவர்கள் அளித்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை வரும் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் புகார் அளித்த மாணவர்கள் 13 பேரும் முறைகேடு தொடர்பான ஆவணங்களுடன் சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு முறைப்படி அழைப்பாணை விடுக்கப்பட்டது. 

பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2.5 கோடி முறைகேடு: புகார் அளித்த மாணவர்களிடம் விசாரணை

அதன் பேரில் 11 மாணவர்கள் இன்றைய தினம் சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சூரமங்கலம் உதவி ஆணையாளர் 11 மாணவர்களிடம் கூட்டு விசாரணை நடத்தினர். பின்னர் ஒவ்வொரு மாணவர்களாக தனித்தனியே சூரமங்கலம் உதவி ஆணையாளர் விசாரணை நடத்தினார். பெரியார் பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவர்களிடம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது.

அனைத்து நிலை அலுவலர்களிடமும் விசாரணை 

மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முழுவதும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புகாருக்குள்ளான பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல் மற்றும் இத்திட்டத்தில் பணிபுரிந்த அனைத்து நிலை அலுவலர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என சேலம் மாநகரக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளி விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளி விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
Embed widget