மேலும் அறிய

பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2.5 கோடி முறைகேடு: புகார் அளித்த மாணவர்களிடம் விசாரணை

புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை வரும் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு உத்தரவு.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் ரூ.2.5 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரில், புகார் தெரிவித்த மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் தீன தயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா திட்டத்தின் கீழ் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டு வந்தது. இந்தத் திறன் மேம்பாட்டு பயிற்சியில் ரூ. 2.5 கோடி முறைகேடு நடந்ததாக இத்திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் தேசிய பழங்குடியினர், ஆதிதிராவிடர் நல ஆணையத்திடம் புகார் அளித்தனர். 

பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2.5 கோடி முறைகேடு: புகார் அளித்த மாணவர்களிடம் விசாரணை

இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல், இத்திட்டத்தின் பொறுப்பாளர் சசிகுமார் உள்ளிட்ட பேராசிரியர்கள் சிலர் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மாணவர்கள் அளித்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை வரும் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் புகார் அளித்த மாணவர்கள் 13 பேரும் முறைகேடு தொடர்பான ஆவணங்களுடன் சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு முறைப்படி அழைப்பாணை விடுக்கப்பட்டது. 

பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2.5 கோடி முறைகேடு: புகார் அளித்த மாணவர்களிடம் விசாரணை

அதன் பேரில் 11 மாணவர்கள் இன்றைய தினம் சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சூரமங்கலம் உதவி ஆணையாளர் 11 மாணவர்களிடம் கூட்டு விசாரணை நடத்தினர். பின்னர் ஒவ்வொரு மாணவர்களாக தனித்தனியே சூரமங்கலம் உதவி ஆணையாளர் விசாரணை நடத்தினார். பெரியார் பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவர்களிடம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது.

அனைத்து நிலை அலுவலர்களிடமும் விசாரணை 

மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முழுவதும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புகாருக்குள்ளான பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல் மற்றும் இத்திட்டத்தில் பணிபுரிந்த அனைத்து நிலை அலுவலர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என சேலம் மாநகரக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget