மேலும் அறிய

தருமபுரியில் ஒற்றை யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய ஒற்றை யானையை பிடிப்பதற்கு கும்கி யானை வரவழைப்பு.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து‌ வருகிறது. கடந்த சில மாதங்களாக பாலக்கோடு பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, இண்டூர், பாலக்கோடு, சோமனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகிறது. வனப்பகுதியை இந்த யானை கூட்டம் வனப்பகுதியை விட்டு கிராமப்புறங்களுக்குள் நுழைந்து விவசாய நிலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்து கொண்டு வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. ஆனால் நான்கு, ஐந்து மாதங்களாக ஒற்றை யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் மாவட்ட வனத்துறை மூலம் இந்த ஒற்றை யானையை விரட்டுவதற்கு வேட்டை தடுப்பு வன காவலர்களைக் கொண்டு வனப் பகுதிக்குள் விரட்டி அடிப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் அந்த யானை வனப் பகுதிக்குள் செல்லவில்லை தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திக் கொண்டே வந்தது.
இந்த ஒற்றை யானையை பிடிப்பதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி விவசாயிகளும், அரசியல் கட்சி அமைப்புகளும்  போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்தனர்.

தருமபுரியில் ஒற்றை யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு
 
தொடர்ந்து வனத் துறையினரிடம் சிக்காமல்,விவசாயிகளுக்கும் வனத் துறையினருக்கும் போக்கு காட்டி வரும் யானையை, விரட்ட கும்கி யானையை கொண்டு வர வனத் துறையினர் திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து இன்று  கோயமுத்தூர் மாவட்டம் ஆனைமலை வனப் பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்கின்ற கும்கி யானை, தருமபுரி மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. யானை நடமாட்டம் உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் தற்போது கும்கி யானை கொண்டு வரப்பட்டுள்ளது. 

தருமபுரியில் ஒற்றை யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு
 
தொடர்ந்து யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கும்கி யானையை அழைத்துச் சென்று, ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்ட பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத் துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். மேலும் 4, 5 மாத காலமாக விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்து, சேதம் செய்து வந்த ஒற்றை காட்டு யானையை வனப் பகுதியில் விரட்டும் பணி தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டி விடுவோம் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் காட்டு யானையை கண்டவுடன் அதனை துன்புறுத்தாமல், வனத் துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒற்றை யானையை காட்டு பகுதிக்குள் விரட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget