மேலும் அறிய

பயத்தின் உச்சியில் முதலமைச்சர் இருப்பதால் கையெழுத்து இயக்கத்தை மிரட்டி பார்க்கிறார் - கே.பி.ராமலிங்கம்

மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ளவாவது கையெழுத்து இயக்கத்தை தடுக்கக் கூடாது என சேலத்தில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் உள்ள பாஜக கல்வி பிரிவு அலுவலகத்தில் அக்கட்சியில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, அனைவருக்கும் சமமான கல்வி வேண்டும் என ஒரு அரசை வலியுறுத்தும் கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையை இந்த தேசம் இதுவரை பார்த்ததில்லை. முதலமைச்சர் ஸ்டாலினின் தனிப்பட்ட கையாலாகாத தனத்தால் அரசை வழிநடத்த தெரியாமல் ஏராளமான சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளது. இதனை திசை திருப்பவே மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். 

பயத்தின் உச்சியில் முதலமைச்சர் இருப்பதால் கையெழுத்து இயக்கத்தை மிரட்டி பார்க்கிறார் - கே.பி.ராமலிங்கம்

மேலும் 1965இல் நடந்தது போல தற்போதும் இந்தியை திணிக்க முற்படுவதாக அவர் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்து வருகிறார். மும்மொழிக் கொள்கையின் மூன்றாவது மொழி இந்தி அல்ல, மாணவர்களின் விருப்ப மொழி என்ற அவர், 1967-இல் திமுக ஆட்சியில் அமர்ந்ததற்கு இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணம் இல்லை. எம்ஜிஆர் சுடப்பட்டதை மட்டுமே வைத்து திமுக ஆட்சி பிடித்தது என குறிப்பிட்டார்.

மும்மொழி கொள்கை என்பது திமுகவிற்கு கசக்கும் - மக்களுக்கு இனிக்கும் என்ற கே.பி.ராமலிங்கம் தற்போது நடைபெற உள்ள கையெழுத்து இயக்கம் அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார். 

அரசியல் லாபத்திற்காக கூட்டணியில் உள்ளவர்களே மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறார்கள். மொழியை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் இதனால் பயப்படுகிறார்கள். பயத்தின் உச்சியில் முதலமைச்சர் இருப்பதால் கையெழுத்து இயக்கத்தை மிரட்டி பார்க்கிறார். மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ளவாவது கையெழுத்து இயக்கத்தை தடுக்கக் கூடாது. அதை விட்டுவிட்டு கையிடத்தை இயக்கம் நடத்திய தமிழிசையை கைது செய்தது கண்டனத்துக்குரியது என்றார்.

பயத்தின் உச்சியில் முதலமைச்சர் இருப்பதால் கையெழுத்து இயக்கத்தை மிரட்டி பார்க்கிறார் - கே.பி.ராமலிங்கம்

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், மும்மொழிக் கொள்கை ஏற்றுக்கொண்ட எந்த மாநிலமும் சீரழியவில்லை. மும்மொழிக் கொள்கையில் தாய்மொழி கட்டாயமாக உள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநிலத்தில் உள்ளவர்களும் தனது தாய் மொழியை கட்டாய பாடமாக படிக்க எழுத கற்றுக் கொள்வார்கள். பீகார் முன்னேற்றத்தை பார்க்காமல் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக குறிப்பிட்டார்.

நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கூட்டு நடவடிக்கை குழுவில் தென் மாநில முதல்வர்களை இணைப்பதற்கு முன் காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தியை முடிந்தால் இணைக்கட்டும். மும்மொழி கொள்கைக்கு எதிராக ராகுல் காந்தி பேசுவாரா? என கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget