மேலும் அறிய

தருமபுரியில் போலி மதுபான தொழிற்சாலை நடத்திய கணவன், மனைவி குடும்பத்துடன் கைது

’’போலி மது பாட்டில்கள் மற்றும் 5 பேரல்கள், 3000 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல்’’

 
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே ஆத்துமேடு பகுதியில் போலி மதுபான தொழிற்சாலை நடத்தி அங்கு இருந்து போலி மது பாட்டில்கள் தயாரித்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு  ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து எஸ்பி சி.கலைச்செல்வன் உத்தரவை தொடர்ந்து தருமபுரி மதுவிலக்கு அமல் பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜாசோமசுந்தரம் தலைமையில் காவல் ஆய்வாளர் பாரதி மோகன், உதவி ஆய்வாளர் விஜய சங்கர் உள்ளிட்ட காவலர்கள் மற்றும் மாரண்டஅள்ளி காவல் துறையினர்  இணைந்து மாரண்டஹள்ளி பகுதியில் சோதனை நடத்தினர்.
 

தருமபுரியில் போலி மதுபான தொழிற்சாலை நடத்திய கணவன், மனைவி குடும்பத்துடன் கைது
 
அப்பொழுது மாரண்டஹள்ளி அருகே உள்ள ஆத்துமேடு கிராமத்தில், அகரம் ரோட்டில் உள்ள போயர் கொட்டாய் பகுதியில் பழச்சாறு மற்றும் மது அல்லாத ஒயின் தயாரிப்பதற்கு அரசிடம் அனுமதி பெற்று விட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து, போலி மதுபான தொழிற்சாலை நடத்துவது தெரியவந்தது. மேலும்  கள்ளச்சாராயம் தயாரித்து அதற்கு கலர் கலந்து அதனை மது பாட்டில்களில் நிரப்பி போலி மதுபான கம்பெனி ஸ்டிக்கர்கள் ஒட்டி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுவதுவது தெரியவந்தது.
 
இதனையடுத்து அந்த போலி மதுபான தொழிற்சாலையை நடத்தி வந்த சுந்தரராஜன்(45), இவரது மனைவி முத்துமணி (37) மற்றும் வளர்ப்பு மகன் ஷேக் பாண்டியன் (25) ஆகிய 3 பேரையும் மதுவிலக்கு அமல்பிரிவினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரம் மற்றும் உபகரணங்கள், கள்ள சாராயம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், போலி மது பாட்டில்கள் மற்றும் 5 பேரல்கள், 3000 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலி மதுபாட்டில்கள் மற்றும் 3000 லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல் கீழே ஊற்றி அழித்தனர்.
 

தருமபுரியில் போலி மதுபான தொழிற்சாலை நடத்திய கணவன், மனைவி குடும்பத்துடன் கைது
 
தொடர்ந்து போலி மதுபாட்டில் கம்பனி நடத்தி வந்தது குறித்து, தருமபுரி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இங்கிருந்து எந்தெந்த பகுதிக்கு போலி மதுபாட்டில்கள் வினகயோகம், செய்யப்படுகிறது, இதுபோன்று வேறெங்காவது போலி மதுபாட்டில்கள் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்த விவரங்களை மதுவிலக்க் அமல்பிரிவு காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர். மேலும் மாரண்டஅள்ளி பகுதியில் போலி மதுபான தொழிற்சாலை நடத்தி வந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget