மேலும் அறிய

’’சிப்காட் அமைக்க நிலம் தரமாட்டோம்’’ - தருமபுரி ஆட்சியரிடம் மனு தர வந்த விவசாயிகள்

அரசுக்கு சொந்தமான 1023 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ள நிலையில், மீதம் தேவைப்படும் நிலத்திற்காக விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி பகுதியில் சுமார் 1733 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க தமிழக அரசு அறிவித்தது. அதனையடுத்து சிப்காட் அமைக்க முதற்கட்டமாக அளவிடும் பணி நடைபெற்று வருகிறது.  அரசுக்கு சொந்தமான 1023 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ள நிலையில், மீதம் தேவைப்படும் நிலத்திற்காக விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 150 ஏக்கர் விவசாய நிலத்தை நில உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அதற்குரிய தொகையை அரசு தரப்பில் வழங்க இருக்கிறது. அரசு அறிவித்தபடி சிப்காட் அமைக்க மீதம் தேவைப்பட உள்ள நிலத்தை அந்த ஒன்றியத்திற்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் உள்ள விவசாய பட்டா நிலங்களில் கையகபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
இதனையறிந்த விவசாயிகள், நிலம் அளவை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அரசு அதிகாரிகள் தங்கள் நிலங்களை அளவிட வேண்டாம் என்றும், சிப்காட் அமைக்க தாங்கள், தங்ளது விவசாய நிலங்களை கொடுக்கமாட்டோம் என தெரிவித்து, கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ந்து அரசு அதிகாரிகள் நிலம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் சிப்காட் அமைக்க அரசுக்கு சொந்தமான நிலத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 
 



’’சிப்காட் அமைக்க நிலம் தரமாட்டோம்’’ - தருமபுரி ஆட்சியரிடம் மனு தர வந்த விவசாயிகள்
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, அதிகாரிகள் நிலம் அளவை செய்ய வந்ததால், விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாய நிலத்தை எடுக்க கூடாது என தனித்தனியாக  மனு கொடுக்க வந்தனர். அப்போது மனு கொடுக்க வந்த விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டிருந்த மஞ்சள், கரும்பு, வாழை, நெல், வாழை, கடலை உள்ளிட்ட பயிர்களை கையில் எடுத்து வந்தனர்.
 
இதனையறிந்த அரசு அதிகாரிகள் அலுவலக வாயில் நிறுத்தி, விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். தொடர்ந்து 183 விவசாயிகளிடம் மனுக்களை பெற்ற அதிகாரிகள், விவசாயிகளின் சார்பில் 5 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து சிப்காட் அமைக்க விவசாய நிலத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்த மனு கொடுக்க வந்த விவசாயிகள் கையில் பயிர்களை எடுத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget