மேலும் அறிய

தருமபுரியில் வருவாய் மேற்பார்வையாளர் தாக்கிய வாடிக்கையாளர் - மின் ஊழியர் புகார்

பாலக்கோடு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் வாடிக்கையாளர் அத்துமீறி நுழைந்து வருவாய் மேற்பார்வையாளர் மீது தாக்குதல்-காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மின் ஊழியர் புகார்.

பாலக்கோடு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் வாடிக்கையாளர் அத்துமீறி நுழைந்து வருவாய் மேற்பார்வையாளர் மீது தாக்குதல் நடத்தினார். காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மின் ஊழியர் புகார் கூறியுள்ளனர்.
 
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பைபாஸ் சாலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் உதவி மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பாலகோடு நகரப் பிரிவில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள மின் இணைப்புகளின் மாதாந்திர மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இதே போல் கடந்த வெள்ளிக் கிழமை 7 ம் தேதி பாலக்கோடு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை மின் பொறியாளர் சசிகுமார் மின் கட்டண வசூல் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அலுவலகத்திற்கு வந்த வாடிக்கையாளர் திடீரென அலுவலகத்திற்கு உள்ளே புகுந்து, சசிகுமாரிடம் தண்டுகாரணஅள்ளி பகுதியில் என்னுடைய வீடு உள்ளது என்றும், என்னுடைய வீட்டிற்கு அதிகப்படியாக மின் கட்டணம் வந்து உள்ளது என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஏஇ எங்கே என்று கேட்டுள்ளார். ஏஇ உள்ளே இருப்பார் என்று சசிகுமார் கூறியுள்ளார். பிறகு மீண்டும் திரும்பி வந்து ஏஇ உள்ளே இல்லை. ஏன் இதை முன்கூட்டியே என்னிடம் தெரிவிக்கவில்லை என்று ஒருமையில் பேசி உள்ளார். 
 

தருமபுரியில் வருவாய் மேற்பார்வையாளர் தாக்கிய வாடிக்கையாளர் - மின் ஊழியர் புகார்
   
அப்போது சசிகுமார் ஏஇ வெளியில் சென்றது எங்களுக்கு தெரியாது. மேலும் எங்களுடைய உதவி மின் பொறியாளர் பகிர்மான அலுவலகத்திற்கு, பாலக்கோடு நகரப் பிரிவு பகுதிகள் மட்டும் தான் மின் கட்டணம் செலுத்த வேண்டும். உங்களுடைய பகுதி எங்கள் அலுவலகத்திற்கு வருவதில்லை நீங்கள் வந்து மைல்கல் அலுவலகத்தில் சென்று கேளுங்கள் எனக் கூறியுள்ளார். அப்பொழுது சசிகுமாரை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி, அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்த வரை தாக்கியுள்ளார். மேலும் அவரே மொபைல் வீடியோ எடுத்து, உன்னை பார்த்துக் கொள்கிறேன் என்று மிரட்டியுள்ளார். தொடர்ந்து வாடிக்கையாளர் வெளியில் சென்று பின், வருவாய் மேற்பார்வையாளர் சசிகுமார் பாலகோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 

தருமபுரியில் வருவாய் மேற்பார்வையாளர் தாக்கிய வாடிக்கையாளர் - மின் ஊழியர் புகார்
 
அதனையடுத்து புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்யததில் அவர் வினாயகமூர்தி என்பதும், இவர் நமது கிராம சபை இயக்கம் நடத்தி வருவதாகவும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து  சசிகுமார் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் காவல் துறையினர் இதுவரை வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்துள்ளனர். எனவே அலுவலகத்தில் அரசு பணியில் இருந்த என்னை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி திட்டியது மட்டுமல்லாமல், என் மீது கொலை வெறி தாக்குதலில் நடத்தியவர் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எடுக்காத பட்சத்தில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பது மட்டுமல்லாமல் மின்சார ஊழியர்கள் சங்கத்தில் கலந்து பேசி போராட்டத்தில் ஈடுபடுவதாக சசிகுமார் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Salem Power Cut 04.07.2026 : சேலம் மாவட்டத்தின் பல இடங்களில் இன்று மின் தடை... முழு விவரம் இதோ!
Salem Power Cut 04.07.2026 : சேலம் மாவட்டத்தின் பல இடங்களில் இன்று மின் தடை... முழு விவரம் இதோ!
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
Salem Power Cut: சேலம் மக்களே கவனிங்க! நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை! உங்கள் பகுதி உள்ளதா?
Salem Power Cut: சேலம் மக்களே கவனிங்க! நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை! உங்கள் பகுதி உள்ளதா?
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ரூ.2.02 கோடியில் விரிவாக்கம்: தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ரூ.2.02 கோடியில் விரிவாக்கம்: தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijaya Baskar Gutkha case : தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்
தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Embed widget