மேலும் அறிய

பென்னாகரம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

விற்பனை செய்யப்படும் மீன்கள் அழுகிய நிலையில் உள்ளதா? தடை செய்யப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஒகேனக்கல் சாலையில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.  இந்த மீன் மார்க்கெட்டில் பழைய மீன்கள், ஐஸ் பெட்டியில் வைத்தும், அரசால் தடை செய்யப்பட்ட மீன் வகைகள், சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யபடுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து பென்னாகரம் மீன் மார்க்கெட்டில், மீன் வளத்துறை, உணவு பாதுகாப்பு துறையினர்  திடீரென ஆறாவது செய்தனர். அப்பொழுது கடைகளில், விற்பனை செய்யப்படும் மீன்கள் அழுகிய நிலையில் உள்ளதா? தடை செய்யப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா?  சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். 
 

பென்னாகரம் மீன் மார்க்கெட்டில்  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
 
மேலும் அனைத்து கடை உரிமையாளர்களிடம் கடை வைப்பதற்கான உரிமம் பெறவும் , விற்பனையாளர்கள் உடல் தகுதி, மருத்துவ சான்று உள்ளிட்டவற்றை முறையாக பெற வேண்டும் எனவும், பொது மக்களுக்கு புதிய மீன்களை சுகாதாரமான முறையில் வைத்து மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மீன் வளத் துறையினர் அறிவுறுத்தினர். இதில் மீன்வள ஆய்வாளர் வேலுசாமி உள்ளிட்ட மீன் வளத் துறையினர்  ஆய்வு செய்தனர்.
 

 
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மயான வசதி வேண்டி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்.
 

பென்னாகரம் மீன் மார்க்கெட்டில்  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
 
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டுகோணாம்பட்டி, மஞ்சவாடி ஊராட்சிகளில் நொனங்கனூர், ஆலமரத்தூர் கிராம மக்கள் கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் மயானம் மற்றும் மயானத்திற்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.‌ இதனால்  மயானத்துக்கு செல்ல முடியாமல் மலை கிராமமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.  
 

பென்னாகரம் மீன் மார்க்கெட்டில்  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
 
 இதனால் மயான ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி, மயானத்திற்கு பாதை வசதி செய்ய வேண்டி தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் நொனங்னூர் மலைவாழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பை வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு அளவீடு செய்து கொடுக்க வேண்டும். சமீபத்தில் இக் கிராமத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யச் சென்ற போது அப்பகுதியைச் சேர்ந்த நபர் சுடுகாட்டுப் பாதையில் வழிவிடாமல் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். ஆகவே ,30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தும் மயானத்தை கிராம மக்கள் எவ்வித இடையூறும் இன்றி பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் சுப்பிரமணியிடம், மலைவாழ் மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.  இதில் மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவரும், முன்னாள் அரூர் சட்டமன்ற உறுப்பினரும் டில்லி பாபு, விவசாய சங்க வட்ட செயலாளர் வஞ்சி, மாநில பொருளாளர் பொன்னுசாமி , மாவட்டச் செயலாளர் மல்லையன், வட்டத் தலைவர் தீர்த்தகிரி, வட்ட பொருளாளர் பொன்னுசாமி, மாநில உதவி செயலாளர் கண்ணகி, வட்டச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
Embed widget