மேலும் அறிய

ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி இப்படி மாறும்.. அமைச்சர் சொன்னது என்ன?

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பகுதி-2 செயல்படுத்து அரசு ரூபாய் 4500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

 தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த, எர்ரன அள்ளியில் ஜெர்த்தலாவ் கால்வாய் நெடுகை 5.00 கிலோ மீட்டரிலிருந்து ஒரு புதிய கால்வாய் அமைத்து எர்ரனஅள்ளி ஏரி, புலிக்கரை ஏரி உட்பட இதர 14 ஏரிகளுக்கு சின்னாறு அணையின் மழைக் கால வெள்ள உபரிநீர் வழங்கும் திட்டப் பணி ரூ.30.38 கோடி மதிப்பிலும், பாலக்கோடு வட்டம், திருமல்வாடி கிராமத்தில் கெசர்குலி ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணிகளையும் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.


ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி இப்படி மாறும்.. அமைச்சர் சொன்னது என்ன?
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பன்னீர்செல்வம்,


தருமபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சின்னாறு அனையிலிருந்து மழைக்கால உபரி நீரை ஜெர்த்தலாவ் கால்வாய் நெடுகை 5.00 கிலோ மீட்டரிலிருந்து ஒரு புதிய கால்வாய் அமைத்து எர்ரனஅள்ளி ஏரி, புலிக்கரை ஏரி உட்பட இதர 14 ஏரிகளுக்கு சின்னாறு அணையின் மழைக்கால வெள்ள உபரிநீர் வழங்கும் திட்டப் பணி ரூ.30.38 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்பகுதியில் உள்ள 432 ஏக்கர் விசாய நிலங்கள் பாசன வசதிபெறும். மேலும் கூடுதலாக 1572 மெட்ரிக் டன் நெல், காய்கறிகள் உணவு உற்பத்தி மேற்கொள்ளப்டும்.

 


ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி இப்படி மாறும்.. அமைச்சர் சொன்னது என்ன?
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், திருமல்வாடி கிராமத்தில் கெசர்குலி ஆற்றின் குறுக்கே புல எண். 451-ல் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணிகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 67 திறந்தவெளி மற்றும் ஆழ்த்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் நிலை ஏற்படும். இந்த இரண்டு திட்டங்களும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவந்தது. இதை தமிழக அரசு கருத்தில்கொண்டு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.


ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி இப்படி மாறும்.. அமைச்சர் சொன்னது என்ன?
காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தினால் தருமபுரி மாவட்டம் செழுமையான மாவட்டமாக மாறும், மேலும் பொருளாதாரத்தில் முன்னேறிய மாவட்டமாக உயரும். தற்போது தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பகுதி-2 செயல்படுத்து அரசு ரூபாய் 4500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்க வரும்போது தருமபுரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும். தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை வெகுவிரையில் அமையும். புதிதாக தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் தருமபுரி நோக்கி வந்துக்கொண்டுள்ளன. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget