மேலும் அறிய

ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி இப்படி மாறும்.. அமைச்சர் சொன்னது என்ன?

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பகுதி-2 செயல்படுத்து அரசு ரூபாய் 4500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

 தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த, எர்ரன அள்ளியில் ஜெர்த்தலாவ் கால்வாய் நெடுகை 5.00 கிலோ மீட்டரிலிருந்து ஒரு புதிய கால்வாய் அமைத்து எர்ரனஅள்ளி ஏரி, புலிக்கரை ஏரி உட்பட இதர 14 ஏரிகளுக்கு சின்னாறு அணையின் மழைக் கால வெள்ள உபரிநீர் வழங்கும் திட்டப் பணி ரூ.30.38 கோடி மதிப்பிலும், பாலக்கோடு வட்டம், திருமல்வாடி கிராமத்தில் கெசர்குலி ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணிகளையும் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.


ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி இப்படி மாறும்.. அமைச்சர் சொன்னது என்ன?
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பன்னீர்செல்வம்,


தருமபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சின்னாறு அனையிலிருந்து மழைக்கால உபரி நீரை ஜெர்த்தலாவ் கால்வாய் நெடுகை 5.00 கிலோ மீட்டரிலிருந்து ஒரு புதிய கால்வாய் அமைத்து எர்ரனஅள்ளி ஏரி, புலிக்கரை ஏரி உட்பட இதர 14 ஏரிகளுக்கு சின்னாறு அணையின் மழைக்கால வெள்ள உபரிநீர் வழங்கும் திட்டப் பணி ரூ.30.38 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்பகுதியில் உள்ள 432 ஏக்கர் விசாய நிலங்கள் பாசன வசதிபெறும். மேலும் கூடுதலாக 1572 மெட்ரிக் டன் நெல், காய்கறிகள் உணவு உற்பத்தி மேற்கொள்ளப்டும்.

 


ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி இப்படி மாறும்.. அமைச்சர் சொன்னது என்ன?
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், திருமல்வாடி கிராமத்தில் கெசர்குலி ஆற்றின் குறுக்கே புல எண். 451-ல் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணிகளும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள 67 திறந்தவெளி மற்றும் ஆழ்த்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் நிலை ஏற்படும். இந்த இரண்டு திட்டங்களும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவந்தது. இதை தமிழக அரசு கருத்தில்கொண்டு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.


ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி இப்படி மாறும்.. அமைச்சர் சொன்னது என்ன?
காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தினால் தருமபுரி மாவட்டம் செழுமையான மாவட்டமாக மாறும், மேலும் பொருளாதாரத்தில் முன்னேறிய மாவட்டமாக உயரும். தற்போது தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பகுதி-2 செயல்படுத்து அரசு ரூபாய் 4500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்க வரும்போது தருமபுரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும். தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை வெகுவிரையில் அமையும். புதிதாக தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் தருமபுரி நோக்கி வந்துக்கொண்டுள்ளன. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget