மேலும் அறிய

தருமபுரி: வாணியாற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர் - மணல் மூட்டைகளை கொண்டு தடுக்கும் தன்னார்வலர்கள்

அரூரை  சுற்றி சுமார் 20 கி.மீ தூரத்திற்கு விவசாயத்திற்கு தேவையான நீர் மட்டம் உயர வாய்ப்பு

தருமபுரி மாவட்டம் அரூர் பெரிய ஏரி சுமார் 170 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு  கொளகம்பட்டி  கல்லாற்றின் குறுக்கே உள்ள கார ஒட்டு  பகுதியில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பகுதி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால்   வாணியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வாணியாறு அணையில் இருந்து சுமார் ஒரு மாத காலமாக உபரி நீர் வெளியேறுகிறது. இந்த உபரி நீரால், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், பறையப்பட்டிபுதூர், தென்கரைக்கோட்டை உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழிகிறது. இந்த  தண்ணீர் கல்லாற்றில் கலந்து, வாணியாறு வழியாக தென்பெண்ணை ஆற்றுக்கு செல்கிறது. 

தருமபுரி: வாணியாற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர் - மணல் மூட்டைகளை கொண்டு தடுக்கும் தன்னார்வலர்கள்
 
இந்நிலையில் தென்கரைகோட்டை ஏரி நிரம்பி உபரிநீர் கல்லாற்றில் செல்கிறது. மேலும் கல்லாற்றில்  கொளகம்பட்டி அருகே உள்ள ஒரு கார ஒட்டு தடுப்பணை உயரம் குறைவாக இருப்பதால், அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பில்லாமல் உள்ளது. இதனை அறிந்து அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் உதவியுடன், அழகு அரூர் தன்னார்வ அமைப்பினர் தடுப்பணையில் இன்று 500 மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 
தருமபுரி: வாணியாற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர் - மணல் மூட்டைகளை கொண்டு தடுக்கும் தன்னார்வலர்கள்
 
தொடர்ந்து இன்று இரவு கல்லாற்றில் உள்ள ஒட்டுக்கு தண்ணீர் வந்ததும், அரூர் பெரிய ஏரி தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால், அரூர் நகர் பகுதியில் சுமார் 5 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. மேலும் அரூரை  சுற்றி சுமார் 20 கி.மீ தூரத்திற்கு விவசாயத்திற்கு தேவையான நீர் மட்டம் உயரும். ககந்த ஆண்டு இதே போல் தன்னார்வ அமைப்பினர் முயற்சியால், அரூர் ஏரிக்கு தண்ணீர் நிரப்பியதால், இன்னமும் ஏரியில் தண்ணீர் இருந்து வருகிறது. இதனால் அரூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் கால்வாய் செல்லும் பகுதியில், கிராம மக்கள் ஒன்றிணைந்து மின் மோட்டர் வைத்து தண்ணீர் எடுத்து, கொளகம்பட்டி ஏரியையும் நிரம்பி கொண்டனர். தற்போது வாணியாறு உபரிநீரை கல்லாற்றின் ஒட்டின் தடுப்பணையில் இருந்து மீண்டும் அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தன்னார்வ அமைப்பினரை பொதுமக்களும், விவசாயிகளும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget