மேலும் அறிய

தருமபுரியில் ஆபத்தான முறையில் சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்

ஆபத்தான முறையில் சாலையை கடந்து சென்று பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள். சிறிய பாலம் அமைத்து தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதில் பாலக்கோடு, பென்னாகரம் பகுதியில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது.  இதனால் சோம்பட்டி, பேட்ரஹள்ளி, நல்லாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி, இண்டூர் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இண்டூர் ஏரி கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது நிரம்பி உள்ளது. இந்நிலையில் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் நத்தஹள்ளி வழியாக நாகாவதி அணைக்கு செல்கிறது. இதனால் நத்தஹள்ளி அருகே சாலையில் குறுக்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நத்தள்ளி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், இந்த சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் இரண்டு பள்ளிகளுக்கும் செல்லும் குழந்தைகள் ஆபத்தான முறையில் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய சூழல் இருந்து வருகிறது.
 
மேலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகளை தண்ணீரை கடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தினமும் காலை மற்றும் பள்ளி முடியும் மாலை நேரங்களில் பெற்றோர்கள் குழந்தைகளை தண்ணீரில் கையை பிடித்து அழைத்துச் செல்வதும், நீண்ட வரிசையில் நின்று கொண்டு மாணவ, மாணவிகளை தண்ணீரை கடந்து செல்லவும் உதவுகின்றனர்.
 
இந்நிலையில் தண்ணீரை கடந்து செல்கின்ற பொழுது மாணவி ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் மாணவியை தூக்கிச் சென்றனர். ஒருவேளை இந்தப் பகுதியில் மாணவர்கள்  மட்டுமே சாலை கடந்திருந்தால் மிகப்பெரிய ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். மேலும் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை அழைத்து செல்ல வருவதால், வேலைக்கு போக முடிவதில்லை.
 


தருமபுரியில் ஆபத்தான முறையில் சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்
 
மேலும் அந்தப் பகுதியில் இருந்து வரும் கிராம மக்களும் இந்த தண்ணீரில் நடந்து செல்கின்றனர். மேலும் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இதனால் தண்ணீரில் மேடு, பள்ளம் தெரியாத நிலை இருப்பதால், வயதானவர்கள், முதியவர்கள் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுகின்ற சூழல் இருந்து வருகிறது. அவ்வாறு கீழே தடுமாறி விழும் பட்சத்தில் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் அபாயமும் இருந்து வருகிறது. எனவே இந்த தண்ணீரில் பள்ளி குழந்தைகளும் வயதான முதியவர்களும் கடந்து செல்வதற்கு தற்காலிகமான ஒரு தீர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் தண்ணீர் குறைந்தவவுடன் இந்த பகுதியில் ஒரு சிறிய தலைப்பாலம் அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வசதி செய்து தர வேண்டும் என கிராமமக்களும், பள்ளி குழந்தைகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தருமபுரியில் ஆபத்தான முறையில் சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்
 
இதனையறிந்த நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தண்ணீரை கடந்து செல்ல, ஆண்களை வரிசையாக நிறுத்தி மாணவர்கள் பாதுகாப்பாக செல்ல உதவி செய்தனர். மேலும் தண்ணீர் குறைந்தால், மட்டுமே இந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதுவரை மாணவர்களும், பொதுமக்களும் பாதுகாப்பாக தண்ணீரை கடக்க கயிறு கட்டி, வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என வட்டாட்சியர் ஆறுமுகம் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

வாக்காளர்களுக்கு ரூ.2000 கொடுத்ததை ஒப்புக்கொண்ட தவெக வேட்பாளர் - வீடியோ ஆதாரத்தால் அதிர்ச்சியான தவெகவினர்
வாக்காளர்களுக்கு ரூ.2000 கொடுத்ததை ஒப்புக்கொண்ட தவெக வேட்பாளர் - வீடியோ ஆதாரத்தால் அதிர்ச்சியான தவெகவினர்
அப்பாடா.. ஒருவழியாகத் திறந்தாச்சு - சேலத்தை அதிரவைத்த மதுபிரியர்களின் மெகா கியூ வரிசை
அப்பாடா.. ஒருவழியாகத் திறந்தாச்சு - சேலத்தை அதிரவைத்த மதுபிரியர்களின் மெகா கியூ வரிசை
இணையத்தில் டிரெண்டாகும் சேலம் 'கியூ' வீடியோ - டாஸ்மாக் மூடியதால் தனியார் பார்களில் முண்டியடித்த கூட்டம்
இணையத்தில் டிரெண்டாகும் சேலம் 'கியூ' வீடியோ - டாஸ்மாக் மூடியதால் தனியார் பார்களில் முண்டியடித்த கூட்டம்
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
Embed widget