மேலும் அறிய

தருமபுரியில் ஆபத்தான முறையில் சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்

ஆபத்தான முறையில் சாலையை கடந்து சென்று பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள். சிறிய பாலம் அமைத்து தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதில் பாலக்கோடு, பென்னாகரம் பகுதியில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது.  இதனால் சோம்பட்டி, பேட்ரஹள்ளி, நல்லாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி, இண்டூர் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இண்டூர் ஏரி கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது நிரம்பி உள்ளது. இந்நிலையில் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் நத்தஹள்ளி வழியாக நாகாவதி அணைக்கு செல்கிறது. இதனால் நத்தஹள்ளி அருகே சாலையில் குறுக்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நத்தள்ளி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், இந்த சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் இரண்டு பள்ளிகளுக்கும் செல்லும் குழந்தைகள் ஆபத்தான முறையில் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய சூழல் இருந்து வருகிறது.
 
மேலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகளை தண்ணீரை கடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தினமும் காலை மற்றும் பள்ளி முடியும் மாலை நேரங்களில் பெற்றோர்கள் குழந்தைகளை தண்ணீரில் கையை பிடித்து அழைத்துச் செல்வதும், நீண்ட வரிசையில் நின்று கொண்டு மாணவ, மாணவிகளை தண்ணீரை கடந்து செல்லவும் உதவுகின்றனர்.
 
இந்நிலையில் தண்ணீரை கடந்து செல்கின்ற பொழுது மாணவி ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் மாணவியை தூக்கிச் சென்றனர். ஒருவேளை இந்தப் பகுதியில் மாணவர்கள்  மட்டுமே சாலை கடந்திருந்தால் மிகப்பெரிய ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். மேலும் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை அழைத்து செல்ல வருவதால், வேலைக்கு போக முடிவதில்லை.
 


தருமபுரியில் ஆபத்தான முறையில் சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்
 
மேலும் அந்தப் பகுதியில் இருந்து வரும் கிராம மக்களும் இந்த தண்ணீரில் நடந்து செல்கின்றனர். மேலும் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இதனால் தண்ணீரில் மேடு, பள்ளம் தெரியாத நிலை இருப்பதால், வயதானவர்கள், முதியவர்கள் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுகின்ற சூழல் இருந்து வருகிறது. அவ்வாறு கீழே தடுமாறி விழும் பட்சத்தில் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் அபாயமும் இருந்து வருகிறது. எனவே இந்த தண்ணீரில் பள்ளி குழந்தைகளும் வயதான முதியவர்களும் கடந்து செல்வதற்கு தற்காலிகமான ஒரு தீர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் தண்ணீர் குறைந்தவவுடன் இந்த பகுதியில் ஒரு சிறிய தலைப்பாலம் அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வசதி செய்து தர வேண்டும் என கிராமமக்களும், பள்ளி குழந்தைகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தருமபுரியில் ஆபத்தான முறையில் சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்
 
இதனையறிந்த நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தண்ணீரை கடந்து செல்ல, ஆண்களை வரிசையாக நிறுத்தி மாணவர்கள் பாதுகாப்பாக செல்ல உதவி செய்தனர். மேலும் தண்ணீர் குறைந்தால், மட்டுமே இந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதுவரை மாணவர்களும், பொதுமக்களும் பாதுகாப்பாக தண்ணீரை கடக்க கயிறு கட்டி, வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என வட்டாட்சியர் ஆறுமுகம் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Aadi Perukku holiday Bus : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Embed widget