மேலும் அறிய

Dharmapuri: தினமும் 4 கி.மீ நடந்து பள்ளிக்கு செல்லும் 4 கிராம மாணவர்கள் - நேரத்திற்கு பேருந்து இயக்க கோரிக்கை

ஆர்.கோபிநாதம்பட்டியிலிருந்து செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் சரியான மின்விளக்கு வசதிகள் கூட இல்லை. ஒரு சில கம்பங்களில் மட்டும் மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

மொரப்பூர் அருகே பேருந்து வசதியில்லாததால் 4 கிராம மாணவ, மாணவியர்கள் தினமும் 4 கி.மீ நடந்து பள்ளிக்கு செல்கின்றனர். இதனால் பள்ளி நேரத்திற்கு அரசுப் பேருந்து இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட போளையம்பள்ளி ஊராட்சியில்  அமைந்துள்ள மாரப்ப நாயக்கன்பட்டி, போளையம்பள்ளி, பொம்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து  தருமபுரி, கோபிநாதம்பட்டி உள்ளிட்ட வெளியூருக்கு படிக்க 100-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்று வருகின்றனர். மேலும் கிராமங்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் இந்த கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதியில்லை. இந்த கிராமங்களின் வழியாக ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. ஆனால் மதிய நேரத்தில் பேருந்து வருவதால், யாருக்கும் பயனில்லாமல் இருந்து வருகிறது.

Dharmapuri: தினமும் 4 கி.மீ நடந்து பள்ளிக்கு செல்லும் 4 கிராம மாணவர்கள் -  நேரத்திற்கு பேருந்து இயக்க கோரிக்கை
 
இந்நிலையில் இந்த 4 கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை நேரங்களில் சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், சுமார் 4  முதல் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக நடந்து சென்று கோபிநாதம்பட்டி சென்று அங்கிருந்து பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கும் செல்கின்றனர். அதேபோல் வேலைகளுக்கு செல்லும் கிராம மக்களும் நடந்து செல்கின்றனர். மாலை நேரங்களில் மாணவர்கள் பள்ளி முடிந்து நடந்து செல்வதால் சோர்வடைந்து விடுகின்றனர். இதனால் படிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. மேலும் பள்ளி முடிந்து, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு இருந்தால்,  வகுப்பு முடிந்து வருவதற்குள்  இருள் சூழ்ந்து விடுகிறது. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.

Dharmapuri: தினமும் 4 கி.மீ நடந்து பள்ளிக்கு செல்லும் 4 கிராம மாணவர்கள் -  நேரத்திற்கு பேருந்து இயக்க கோரிக்கை
 
மேலும், ஆர்.கோபிநாதம்பட்டியிலிருந்து செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் சரியான மின்விளக்கு வசதிகள் கூட இல்லை. ஒரு சில கம்பங்களில் மட்டும் மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் நடந்து வரும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்து வருகிறது. எனவே மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், போளையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மக்களின் நலன் கருதி காலை 8 மணி மற்றும் மாலை 5  மணி அளவில் நவலை, சின்னா கவுண்டம்பட்டி, பொம்பட்டி போளையம் பள்ளி, மாரப்பன் நாயக்கன்பட்டி மற்றும் ஆர் கோபிநாதம்பட்டி வழியாக தருமபுரி செல்லும் வகையில் அரசு  நகரப் பேருந்து வசதியை செய்து தர வேண்டும். மேலும் ஆர்.கோபிநாதம்பட்டியிலிருந்து செல்லும் சாலையில் போதிய மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவ, மாணவிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் கேட்டபோது, ”ஆர் கோபிநாதம்பட்டி பகுதியில் மாணவ, மாணவிகள் செல்லும் சாலையில்  உள்ள மின்கம்பங்களில் மின்விளக்கு பொருத்த அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து, மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக விரைவில் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும்” எனத் தெரிவித்தார்.

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முதலமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முதலமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சிBahujan Samaj state president death | பகுஜன் சமாஜ் மாநில தலைவர் வெட்டிக் கொலை!POLICE தேடுதல் வேட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முதலமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Breaking News LIVE : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முதலமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்கள் பொறுப்பீர்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!
Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்கள் பொறுப்பீர்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
ZIM vs IND T20: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி..டாஸ் வென்ற இந்தியா! பந்து வீச்சு தேர்வு!
ZIM vs IND T20: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி..டாஸ் வென்ற இந்தியா! பந்து வீச்சு தேர்வு!
Bava Lakshmanan:
Bava Lakshmanan: "கல்யாணம் பண்ணிக்க பொண்ணு கொடுக்கல; ஆசையே விட்டு போச்சு" - மனம் திறந்த பாவா லட்சுமணன்
Embed widget