மேலும் அறிய

சுற்றுலா சென்றபோது காணாமல் போன மாற்று திறனாளி பெண்; பச்சை குத்திய தமிழ் எழுத்துக்களை வைத்து மும்பையில் மீட்ட உறவினர்கள்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா சென்றபோது, ரயில் தவறிய மாற்று திறனாளி பெண்ணை, கையில் இருந்த பச்சை குத்திய தமிழ் எழுத்துக்களால் கண்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தருமபுரியில் 20 ஆண்டுக்கு முன்பு காணாமல் போன வாய் பேச முடியாத பெண் குழந்தையை, கையிலிருந்த தமிழ் எழுத்துக்களை (டாட்டூ) வைத்து மும்பையில் மீட்ட உறவினர்கள்.
 
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கெண்டேனள்ளி புதூரை சேர்ந்த வெங்கடாசலம் மாதம்மாள் மகள் ரம்யா, பிறந்தது முதல் காதுகேளாமல் வாய் பேச முடியாத இருந்து வந்தார். இதனால் தருமபுரி அருகே உள்ள தனியார் வாய் பேச முடியாத காதுகேளாத பள்ளியில் கல்வி கற்க சேர்த்து விட்டனர். அங்கு கடந்த 2002 ஆம் ஆண்டு 10 வயதாக இருக்கும் பொழுது பள்ளி சார்பில், பள்ளி குழந்தைகளுடன் கர்நாடக மாநிலம் மைசூருக்கு சுற்றுலா சென்றனர். அந்த சுற்றுலாவில் 10 வயது ரம்யா, ரயிலில் வரும்போது, வழி மாறி காணமல் போயுள்ளார். இதனையடுத்து ரம்யாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் மகளைதேடும் முயற்சியை கைவிட்டனர்.

சுற்றுலா சென்றபோது காணாமல் போன மாற்று திறனாளி பெண்;  பச்சை குத்திய தமிழ் எழுத்துக்களை வைத்து மும்பையில் மீட்ட உறவினர்கள்
 
இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த வாய் பேச முடியாத ஒரு பெண் மும்பையில் உள்ளார் என அவரது புகைப்படத்தை சென்னையில் உள்ள  காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் அமைப்பிற்கு அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி வைத்தனர். மேலும் கூடுதலாக அந்தப் பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த பெயரையும், புகைப்படமும் எடுத்து அனுப்பியிருந்தனர். 

சுற்றுலா சென்றபோது காணாமல் போன மாற்று திறனாளி பெண்;  பச்சை குத்திய தமிழ் எழுத்துக்களை வைத்து மும்பையில் மீட்ட உறவினர்கள்
 
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத அமைப்பினர் தங்களுக்குள் மாவட்ட வாரியாக தொடர்பு வைத்துள்ளதால், இந்த இளம் பெண்ணின் கையில் பச்சை குத்தியிருந்த புகைப்படம் மற்றும் அந்த பெண் புகைப்படத்தை மாவட்டம் முழுவதும் அனுப்பி வைத்தனர். அதில் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண்ணாக இருக்கலாம் என நினைத்து அவர்களது பெற்றோரை இந்த அமைப்பினர் தொடர்பு கொண்ட பொழுது, அந்த புகைப்படம், கையில் பச்சை குத்தி இருந்த பெயர்களை வைத்து உறுதி செய்தனர்.  இந்த அமைப்பினர் தொடர்பு கொண்டு மகராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்த இளம்பெண்ணை மீட்டு சென்னைக்கு கொண்டு வந்தனர்.  சென்னையில் இருந்து  தருமபுரி ரயில் நிலையம் வளாகத்தில் பெண்ணை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது இளம்பெண்ணின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் மாற்று திறனாளி அமைப்பினர்  பெண்ணுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் பெண்ணை அடையாளங்கண்டு அழைத்து அமைப்பினருக்கு,  வாழ்த்துக்களை தெரிவித்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா சென்றபோது, ரயில் தவறிய மாற்று திறனாளி பெண்ணை, கையில் இருந்த பச்சை குத்திய தமிழ் எழுத்துக்களால் கண்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA, T20 Worldcup Final: கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
Breaking News LIVE: சென்னையில் கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு?: அதிகாரிகள் ஆய்வு
Breaking News LIVE: சென்னையில் கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு?: அதிகாரிகள் ஆய்வு
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA, T20 Worldcup Final: கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
Breaking News LIVE: சென்னையில் கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு?: அதிகாரிகள் ஆய்வு
Breaking News LIVE: சென்னையில் கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு?: அதிகாரிகள் ஆய்வு
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
Liquor Prohibition Amendment Bill: பூரண மதுவிலக்கிற்கான ஆசை இருந்தும், சூழல் இல்லை - கடைகளை குறைத்தும் பயனில்லை - அமைச்சர் முத்துசாமி
Liquor Prohibition Amendment Bill: பூரண மதுவிலக்கிற்கான ஆசை இருந்தும், சூழல் இல்லை - கடைகளை குறைத்தும் பயனில்லை - அமைச்சர் முத்துசாமி
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Embed widget