மேலும் அறிய

அரூர் பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இல்லை - கட்டிடப் பணியை நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு

புதிதாக கட்டப்படும் அரூர் பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இல்லை - ஏற்கனவே இருந்ததைப் போல் அவசர வழி பாதையை விட வேண்டும் என புதிதாக நடைபெறும் கட்டிடப் பணியை நிறுத்திய பொதுமக்கள்.

தருமபுரி  மாவட்டம், அரூர் ஒன்றியத்தில் மொத்தம் 34 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் முத்தானூர், ஈட்டியம்பட்டி, பாளையம், கூடலூர், கீழானூர், செல்லம்பட்டி, பொய்யப்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, பையர்நாயக்கன்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில்  ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம பகுதியில் இருந்து  அரசு கல்லூரி, பள்ளி படிக்கும் மாணவர்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்கள், மருத்துவமனை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்பவர்கள் அனைவரும் அவர்களது சொந்த கிராமத்தில் இருந்து பஸ் மூலம் பயணித்து அரூர் நகரின் முதல் பஸ் நிறுத்த பகுதியான அம்பேத்கர் நகரில்  இறங்கி அரூர் பஸ் ஸ்டாண்ட் இணைக்கும் குறுக்கு சாலையில் ஐந்து நிமிடத்தில் நடந்து சென்று பஸ் நிலையத்தை அடைந்து, அங்கு உள்ள அவசர வழி மூலம் தங்களுக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு தேவையான பஸ்ஸில் பயணம் செய்து பயனடைந்து வந்தனர். மேலும் அம்பேத்கர் நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு பஸ், பஸ் ஸ்டாண்ட் வந்தடைய குறைந்தபட்சம் கால் மணி நேரம் ஆகும். இதனால் தான் பஸ் பயணிகள் குறுக்கு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இருந்தது. 

அரூர் பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இல்லை - கட்டிடப் பணியை நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு
 
தற்பொழுது சுமார் ரூ.4 கோடி மதிப்பில் அரூர் பஸ் ஸ்டாண்ட் இடித்து, நவீன வசதிகளுடன் கூடிய புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இருந்த இடம், அடைக்கப்பட்டு, கட்டிடம் கட்டி வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இல்லையென்றால், கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், அவசர வழி விட வேண்டும் பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் நகரப் பகுதியில் 4,5,6,7,8, ஆவது வார்டு பொதுமக்கள், அவசர வழி விட வேண்டும் என வலியுறுத்தி, திடீரென புதிதாக கட்டும் பணியை  தடுத்து நிறுத்தினர். இதனால் அரூரில் பஸ் ஸ்டாண்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்து பேரூராட்சி நிர்வாகத்தினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது பொதுமக்கள் வசதிக்காக புதிய கட்டிடத்தில் அவசர வழி ஒதுக்கி கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget