மேலும் அறிய

அரூர் பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இல்லை - கட்டிடப் பணியை நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு

புதிதாக கட்டப்படும் அரூர் பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இல்லை - ஏற்கனவே இருந்ததைப் போல் அவசர வழி பாதையை விட வேண்டும் என புதிதாக நடைபெறும் கட்டிடப் பணியை நிறுத்திய பொதுமக்கள்.

தருமபுரி  மாவட்டம், அரூர் ஒன்றியத்தில் மொத்தம் 34 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் முத்தானூர், ஈட்டியம்பட்டி, பாளையம், கூடலூர், கீழானூர், செல்லம்பட்டி, பொய்யப்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, பையர்நாயக்கன்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில்  ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம பகுதியில் இருந்து  அரசு கல்லூரி, பள்ளி படிக்கும் மாணவர்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்கள், மருத்துவமனை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்பவர்கள் அனைவரும் அவர்களது சொந்த கிராமத்தில் இருந்து பஸ் மூலம் பயணித்து அரூர் நகரின் முதல் பஸ் நிறுத்த பகுதியான அம்பேத்கர் நகரில்  இறங்கி அரூர் பஸ் ஸ்டாண்ட் இணைக்கும் குறுக்கு சாலையில் ஐந்து நிமிடத்தில் நடந்து சென்று பஸ் நிலையத்தை அடைந்து, அங்கு உள்ள அவசர வழி மூலம் தங்களுக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு தேவையான பஸ்ஸில் பயணம் செய்து பயனடைந்து வந்தனர். மேலும் அம்பேத்கர் நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு பஸ், பஸ் ஸ்டாண்ட் வந்தடைய குறைந்தபட்சம் கால் மணி நேரம் ஆகும். இதனால் தான் பஸ் பயணிகள் குறுக்கு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இருந்தது. 

அரூர் பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இல்லை - கட்டிடப் பணியை நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு
 
தற்பொழுது சுமார் ரூ.4 கோடி மதிப்பில் அரூர் பஸ் ஸ்டாண்ட் இடித்து, நவீன வசதிகளுடன் கூடிய புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இருந்த இடம், அடைக்கப்பட்டு, கட்டிடம் கட்டி வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் அவசர வழி இல்லையென்றால், கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், அவசர வழி விட வேண்டும் பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் நகரப் பகுதியில் 4,5,6,7,8, ஆவது வார்டு பொதுமக்கள், அவசர வழி விட வேண்டும் என வலியுறுத்தி, திடீரென புதிதாக கட்டும் பணியை  தடுத்து நிறுத்தினர். இதனால் அரூரில் பஸ் ஸ்டாண்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்து பேரூராட்சி நிர்வாகத்தினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது பொதுமக்கள் வசதிக்காக புதிய கட்டிடத்தில் அவசர வழி ஒதுக்கி கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget