மேலும் அறிய

மின்வேலியில் உயிரிழந்த தாய் யானை- 5 நாட்களுக்கு பிறகு நகர்ந்த குட்டி யானைகள்

மாரண்டஹள்ளி அருகே மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்த நிலையில், அங்கேயே சுற்றி வந்த இரண்டு குட்டி யானைகளும், ஐந்து நாட்களுக்கு பிறகு வனப்பகுதியில் நகர்ந்தது.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த காளி கவுண்டன் கொட்டாய் அருகே, உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் நுழைந்து வந்த 2 குட்டிகள் உள்ளிட்ட 5 யானைகள் கூட்டம், கடந்த சில நாட்களுக்கு முன்பு சோளக்கொல்லையில் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 2 பெண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை என மூன்று யானைகளும் பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளும் அதே பகுதியில் சுற்றி சுற்றி வந்தது. இந்த இரண்டு குட்டி யானைகளையும், யானைக் கூட்டங்களுடனோ அல்லது முகாமிற்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து வனத் துறையினர் இரண்டு குட்டி யானைகளையும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு குட்டி யானைகளும் தாயி இறந்த இடத்திற்கு பிளிர்ந்து கொண்டே சுற்றி சுற்றி வந்தது. 

மின்வேலியில் உயிரிழந்த தாய் யானை- 5 நாட்களுக்கு பிறகு நகர்ந்த குட்டி யானைகள்
 
ஆனால் தாயை இழந்த குட்டி யானைகள் அதிக பாய்ச்சலில் ஆவேசமாக சுற்றி திரிந்ததால், குட்டிகளை பிடிக்க முடியாமல் வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு குட்டி யானைகளும் கல்லாகரம் பகுதியில் இருந்து இரண்டு நாட்களுக்கு பிறகு வேறு இடத்தை நோக்கி நகர்ந்து உள்ளது. தற்பொழுது தாய் உயிர் இழந்த இடத்திலிருந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் கடந்து, அத்திமுட்லு சிவன் கோவில் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் நுழைந்துள்ளது. ஆனால் யானை குட்டிகள் வனப் பகுதிக்குள் நுழைந்தாலும், அதனை பாதுகாப்பாக வனத் துறையினர் பின் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் மற்ற யானைகளைப் போல வாழைப்பழம், வாழை இலை உள்ளிட்ட சாதாரணமாக உணவை கொண்டு வந்தாலும், நீதிமன்ற உத்தரவு இருப்பதால், யானையை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் வனத் துறையினர் கடந்த ஐந்து நாட்களாக யானை நடமாட்டத்தையும், உணவு உண்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மின்வேலியில் உயிரிழந்த தாய் யானை- 5 நாட்களுக்கு பிறகு நகர்ந்த குட்டி யானைகள்
 
மேலும் குட்டி யானைகள் சாதாரண உணவை உண்பதால் நீதிமன்றம் மூலம் அடுத்த உத்தரவு வரும் வரை இந்த யானைகளை பிடிப்பதற்கோ, வனப் பகுதியில் விரட்டுவதற்கு முடிவு எடுக்காமல், அதன் நடமாட்டத்தை மட்டும் வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் யானையின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்திற்கும், துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்த பிறகு, கிடைக்கின்ற உத்தரவையடுத்து, அடுத்த கட்டமான முயற்சிகளை மேற்கொள்ள வனத் துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget