மேலும் அறிய

தருமபுரி: காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு.
 
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த தொடர் கனமழையால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 இலட்சம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மழை முற்றிலும் குறைந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கர்நாடக மாநில கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு அடிப்படையாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காவிரி ஆற்றில்  தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 10,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது. 
 

தருமபுரி: காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
 
தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று காலை வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று அதிகரித்து வினாடிக்கு 14,000 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கின் போது, ஒகேனக்கல்லில் பாதுகாப்பு அம்சங்கள் சேதமடைந்ததால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, பரிசல் செல்ல மட்டு அனுமதி வழங்கியும், அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருவதால், காவிரி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர் வள ஆண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

 
தருமபுரி மாவட்டத்தில் விளைச்சல் மற்றும் வரத்து செண்டுமல்லி விலை சரிவு-அறுவடை கூலி கூட கிடைக்காததால், பூவோடு டிராக்டர் வைத்து அழித்து உழவுப் பணி செய்யும் விவசாயி.
 
தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். தருமபுரி  மாவட்டத்தில் தருமபுரி,  பாலக்கோடு, பென்னாகரம்,  காரிமங்கலம், மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், கடத்தூர்,  பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் குண்டுமல்லி, ரோஜா, செண்டு மல்லி, பட்டன்ரோஸ், கனகாம்பரம் உள்ளிட்ட மலர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
 
பூக்கள் சாகுபடியில் செண்டு மல்லிக்கு மருந்து, தண்ணீர், பராமரிப்பு ஆகியவற்றிற்கான செலவு மிகவும் குறைவு என்பதால், சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான அளவில் செண்டு மல்லி சாகுபடி நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, பென்னாகரம், வத்தல்மலை பகுதிகளில் செண்டுமல்லி நடவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி: காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
 
கடந்த இரண்டு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஒரு கிலோ செண்டுமல்லி ரூ.20 முதல் 30 வரை விற்பனையானது. செண்டுமல்லி அதிக அளவில், மகசூல் கிடைத்ததால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். மேலும் தொடர்ந்து போதிய விலை கிடைக்காததால், அறுவடை செய்யும் கூலி ஆட்களுக்கு கூலி கொடுக்க கூட வருவாய் கிடைக்கவில்லை. இதனால் சில விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியில் விட்டனர். இந்நிலையில் நாகவதி அணை பகுதியில் உள்ள விவசாயி, அடுத்த பயிருக்கு உரமாகட்டும் என்ற எண்ணத்தில், பூத்துக் குலுங்கி பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்த செண்டுமல்லி வயலை, பூக்களோடு டிராக்டரை வைத்து அழித்து உழுவு பணியை மேற்கொண்டுள்ளார். மேலும் அதிக அளவில் செலவு செய்தும், போதிய வருவாய் கிடைக்காததால், அப்படியே டிராக்டர் வைத்து அழித்து, அடுத்த பயிருக்கு உரமாக்கியதாக வேதனையோடு விவசாயி தெரிவித்தார்.
 
 
 

தலைப்பு செய்திகள்

மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை
'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை
பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை
பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Embed widget