மேலும் அறிய
ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலாப் பயணிகளுக்கு தொடரும் தடை
மழைநீர் ஒரு இலட்சம் கன அடிக்கு மேல் வருவது இந்தாண்டில் இது இரண்டாவது முறையாகும்.

ஒகேனக்கல் அருவியில் வெள்ளப் பெருக்கு
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் கர்நாடக அணைகளின் நீர் திறப்பால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,35,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழைநீர் வினாடிக்கு 1 இலட்சம் கன அடி வருகிறது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் கர்நாடக அணைகள் இரண்டும் முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, காவிரி ஆற்றில் வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி வரை நீர்வரத்து இருந்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை குறைந்து வந்ததால் நீர் திறப்பு என்பது படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
கடந்த ஒரு வார காலமாக தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து வினாடிக்கு பத்தாயிரம் கன அடியிலிருந்து 15,000, 17,000, 50,000 கன அடியாக அதிகரித்தது. மேலும் நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 70,000 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 34,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து 88,000 மற்றும் 1,08.000 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,35,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, மெயினருவி, சினியருவி, ஐந்தருவி மற்றும் பாறைகளை மூழ்கடித்துள்ளது.

இதில் கர்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு 34, 000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஆனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், தற்போது வினாடிக்கு 1 இலட்சம் கன அடி தண்ணீர் மழைநீரே வந்து கொண்டிருக்கிறது. மேலும் மழைநீர் ஒரு இலட்சம் கன அடிக்கு மேல் வருவது இந்தாண்டில் இது இரண்டாவது முறையாகும். இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக, தொடர்ந்து 50-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், காவிரி ஆற்றங்கரை உள்ள பகுதிகளில் ஆற்றில் குளிக்கவும், இறங்குவும் வேண்டாம் என்றும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றங்கரையோம் உள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாடார் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய், தீயணைப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


6133
Active
6237
Recovered
65
Deaths
Last Updated: Sun 8 June, 2025 at 03:09 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion