மேலும் அறிய

அரூர்: 20 ஆண்டுகளாக 2 வளாகங்களில் செயல்படும் அரசு பள்ளி - அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் மாணவர்கள்

அரூர் அருகே 20 ஆண்டுகளாக அரசு உயர்நிலைப் பள்ளி இரண்டு வளாகங்களில் செயல்படுவதால் அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் ஆசிரியர்கள் மாணவர்கள்.

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கே.ஈச்சம்பாடியில் கடந்த 1993-ம் ஆண்டு அரசு நடுநிலைபள்ளி ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து நடுநிலைப்பள்ளி 1997ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டுவதற்கு வசதியாக கே.ஈச்சம்பாடி செல்லும் வழியில் சுமார் 5 ஏக்கர் நிலம் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெயரில் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் அரசு புறப்போக்கு நிலங்கள் என சுமார் 20 இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதியதாக பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டும் வரை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டு வந்தது. தொடர்ந்து பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டியவுடன் பள்ளியை இடமாற்றம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

அரூர்: 20 ஆண்டுகளாக 2 வளாகங்களில் செயல்படும் அரசு பள்ளி - அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் மாணவர்கள்
 
இதனால் 6 முதல் 8 வரை புதிய கட்டிடத்திலும், 9,10 வகுப்புகள் பழைய இடத்திலும் செயல்பட முடிவு செய்து பொதுமக்கள் பள்ளியை இடமாற்றம் செய்துள்ளதாக தெரிகிறது.  தற்பொழுது கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 8 வரையிலான வகுப்பில் 250 மாணாவர்களும், 9,10 வகுப்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவ  மாணவிகளும் என மொத்தம் 300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமையாசிரியர்,ஒரு ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி சுமார் 2 கி.மீ இடைவெளியில் செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் காலையில் ஒரு இடத்திலும், பிறகு மற்றொரு இடத்திற்கும் சென்று பாடம் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால், ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் 6 முதல் 8 வரை செயல்படும் இடத்தில் போதிய இட வசதி மற்றும் கட்டிடம் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் உள்ளன. ஆனால் 9,10-ம் வகுப்புகள் செயல்பட்டு வரும் இடத்தில் இடவசதி கழிவறை வசதிகள் இல்லை.

அரூர்: 20 ஆண்டுகளாக 2 வளாகங்களில் செயல்படும் அரசு பள்ளி - அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் மாணவர்கள்
 
 இங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கழிப்பிடத்திற்கு செல்ல அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றுப்பகுதிக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் ஆற்றில் தண்ணீர் (தற்போது வெள்ள பெருக்கு) வரும் காலங்களில் மாணவர்கள் ஆற்றுப்பக்கம் சென்றால் தேவையில்லாத விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனால் இரண்டு வளாகங்களில் செய்ல்பட்டு வரும் கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியை,போதிய இடவசதியுடன் கூடிய, 6 முதல் 8 வரை செயல்படும் இடத்திற்கு மாற்றி தரவேண்டும் என கிராம மக்கள் பலமுறை அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே ஆசிரியர் மற்றும் மாணவகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒரே இடத்தில் உயர்நிலைப் பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
மேட்டூர் அருகே மெய்சிலிர்க்க வைக்கும் வரலாற்று பொக்கிஷம்! காவிரி கரையில் பூமிக்கு அடியில் 3,600 ஆண்டுகால மர்மம் உடைந்தது!
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை
'இஎஸ்ஐ, பிஎஃப் கேட்கக்கூடாது’ ரூ.100 பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறை - தூய்மை பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமை
பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை
பெண்களுக்கு குட் நியூஸ் வருமா? தனியார் பஸ்களிலும் இலவச பயணம் வேணும்! வலுக்கும் புதிய கோரிக்கை

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget