மேலும் அறிய

அரூர்: 20 ஆண்டுகளாக 2 வளாகங்களில் செயல்படும் அரசு பள்ளி - அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் மாணவர்கள்

அரூர் அருகே 20 ஆண்டுகளாக அரசு உயர்நிலைப் பள்ளி இரண்டு வளாகங்களில் செயல்படுவதால் அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் ஆசிரியர்கள் மாணவர்கள்.

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கே.ஈச்சம்பாடியில் கடந்த 1993-ம் ஆண்டு அரசு நடுநிலைபள்ளி ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து நடுநிலைப்பள்ளி 1997ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டுவதற்கு வசதியாக கே.ஈச்சம்பாடி செல்லும் வழியில் சுமார் 5 ஏக்கர் நிலம் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெயரில் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் அரசு புறப்போக்கு நிலங்கள் என சுமார் 20 இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதியதாக பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டும் வரை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டு வந்தது. தொடர்ந்து பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டியவுடன் பள்ளியை இடமாற்றம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

அரூர்: 20 ஆண்டுகளாக 2 வளாகங்களில் செயல்படும் அரசு பள்ளி - அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் மாணவர்கள்
 
இதனால் 6 முதல் 8 வரை புதிய கட்டிடத்திலும், 9,10 வகுப்புகள் பழைய இடத்திலும் செயல்பட முடிவு செய்து பொதுமக்கள் பள்ளியை இடமாற்றம் செய்துள்ளதாக தெரிகிறது.  தற்பொழுது கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 8 வரையிலான வகுப்பில் 250 மாணாவர்களும், 9,10 வகுப்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவ  மாணவிகளும் என மொத்தம் 300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமையாசிரியர்,ஒரு ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி சுமார் 2 கி.மீ இடைவெளியில் செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் காலையில் ஒரு இடத்திலும், பிறகு மற்றொரு இடத்திற்கும் சென்று பாடம் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால், ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் 6 முதல் 8 வரை செயல்படும் இடத்தில் போதிய இட வசதி மற்றும் கட்டிடம் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் உள்ளன. ஆனால் 9,10-ம் வகுப்புகள் செயல்பட்டு வரும் இடத்தில் இடவசதி கழிவறை வசதிகள் இல்லை.

அரூர்: 20 ஆண்டுகளாக 2 வளாகங்களில் செயல்படும் அரசு பள்ளி - அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் மாணவர்கள்
 
 இங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கழிப்பிடத்திற்கு செல்ல அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றுப்பகுதிக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் ஆற்றில் தண்ணீர் (தற்போது வெள்ள பெருக்கு) வரும் காலங்களில் மாணவர்கள் ஆற்றுப்பக்கம் சென்றால் தேவையில்லாத விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனால் இரண்டு வளாகங்களில் செய்ல்பட்டு வரும் கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியை,போதிய இடவசதியுடன் கூடிய, 6 முதல் 8 வரை செயல்படும் இடத்திற்கு மாற்றி தரவேண்டும் என கிராம மக்கள் பலமுறை அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே ஆசிரியர் மற்றும் மாணவகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒரே இடத்தில் உயர்நிலைப் பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சேலத்தில் கொடூரம்: பள்ளி மாணவனைக் கொன்று வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் - காரணம் என்ன?
சேலத்தில் கொடூரம்: பள்ளி மாணவனைக் கொன்று வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் - காரணம் என்ன?
Tamil Nadu Election 2026: சேலத்தில் என்ன நடக்குது? - வரிசையில் நின்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி; வியப்பில் வாக்காளர்கள்
சேலத்தில் என்ன நடக்குது? - வரிசையில் நின்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி; வியப்பில் வாக்காளர்கள்
இஸ்லாமியர்களுக்கு அதிமுக செய்தது என்ன? - எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அனல் பறக்கும் பட்டியல் லிஸ்ட்
இஸ்லாமியர்களுக்கு அதிமுக செய்தது என்ன? - எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அனல் பறக்கும் பட்டியல் லிஸ்ட்
விஜய் ஆதரவு பெற்ற வேட்பாளர்... ஆட்டம் காணுமா அதிமுக-வின் கோட்டை? – பரபரக்கும் எடப்பாடி தொகுதி!
விஜய் ஆதரவு பெற்ற வேட்பாளர்... ஆட்டம் காணுமா அதிமுக-வின் கோட்டை? – பரபரக்கும் எடப்பாடி தொகுதி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MLA Kamaraj: அமமுகவின் ஒரே எம்எல்ஏ-வை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிய டிடிவி தினகரன்; என்ன நடக்குது.?
அமமுகவின் ஒரே எம்எல்ஏ-வை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிய டிடிவி தினகரன்; என்ன நடக்குது.?
Sasikala on ADMK : ‘திமுகவுடன் கைக்கோர்த்ததால் தான் இந்த நிலை’ அதிமுக பற்றி சசிகலா பரபரப்பு அறிக்கை..!
‘திமுகவுடன் கைக்கோர்த்ததால் தான் இந்த நிலை’ அதிமுக பற்றி சசிகலா பரபரப்பு அறிக்கை..!
Senthilbalaji : ’செந்தில்பாலாஜி – எஸ்.பி.வேலுமணி ரகசிய சந்திப்பு’ பேசப்பட்டது என்ன..?
’செந்தில்பாலாஜி – எஸ்.பி.வேலுமணி ரகசிய சந்திப்பு’ பேசப்பட்டது என்ன..?
Thirumavalavan: ”அதிமுக - திமுக இணைந்து என்னை முதலமைச்சராக்க முயற்சி” திருமாவளவன் ஓபன் டாக்
”அதிமுக - திமுக இணைந்து என்னை முதலமைச்சராக்க முயற்சி” திருமாவளவன் ஓபன் டாக்
NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
Rahul Gandhi: 10 ஆண்டுகளில் 89 முறை லீக்; 48 மறு தேர்வு, நீட் தேர்வு ஓர் ஏலம்- ராகுல் காந்தி கடும் கண்டனம்
Rahul Gandhi: 10 ஆண்டுகளில் 89 முறை லீக்; 48 மறு தேர்வு, நீட் தேர்வு ஓர் ஏலம்- ராகுல் காந்தி கடும் கண்டனம்
EPS vs CVS : சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்கள்.! எஸ்பிவி, சிவிஎஸ்யை போட்டு பொளந்த அதிமுக
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்கள்.! எஸ்பிவி, சிவிஎஸ்யை போட்டு பொளந்த அதிமுக
CM Vijay Speech: சட்டமன்றத்தில் CM விஜயின் முதல் உரை - குட்டிக்கதை சொல்லி அப்லாஸ் வாங்கிய முதலமைச்சர்
CM Vijay Speech: சட்டமன்றத்தில் CM விஜயின் முதல் உரை - குட்டிக்கதை சொல்லி அப்லாஸ் வாங்கிய முதலமைச்சர்
Embed widget