மேலும் அறிய

அரூர்: 20 ஆண்டுகளாக 2 வளாகங்களில் செயல்படும் அரசு பள்ளி - அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் மாணவர்கள்

அரூர் அருகே 20 ஆண்டுகளாக அரசு உயர்நிலைப் பள்ளி இரண்டு வளாகங்களில் செயல்படுவதால் அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் ஆசிரியர்கள் மாணவர்கள்.

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கே.ஈச்சம்பாடியில் கடந்த 1993-ம் ஆண்டு அரசு நடுநிலைபள்ளி ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து நடுநிலைப்பள்ளி 1997ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டுவதற்கு வசதியாக கே.ஈச்சம்பாடி செல்லும் வழியில் சுமார் 5 ஏக்கர் நிலம் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெயரில் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் அரசு புறப்போக்கு நிலங்கள் என சுமார் 20 இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதியதாக பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டும் வரை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டு வந்தது. தொடர்ந்து பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் கட்டியவுடன் பள்ளியை இடமாற்றம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

அரூர்: 20 ஆண்டுகளாக 2 வளாகங்களில் செயல்படும் அரசு பள்ளி - அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் மாணவர்கள்
 
இதனால் 6 முதல் 8 வரை புதிய கட்டிடத்திலும், 9,10 வகுப்புகள் பழைய இடத்திலும் செயல்பட முடிவு செய்து பொதுமக்கள் பள்ளியை இடமாற்றம் செய்துள்ளதாக தெரிகிறது.  தற்பொழுது கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 8 வரையிலான வகுப்பில் 250 மாணாவர்களும், 9,10 வகுப்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவ  மாணவிகளும் என மொத்தம் 300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமையாசிரியர்,ஒரு ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி சுமார் 2 கி.மீ இடைவெளியில் செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் காலையில் ஒரு இடத்திலும், பிறகு மற்றொரு இடத்திற்கும் சென்று பாடம் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால், ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் 6 முதல் 8 வரை செயல்படும் இடத்தில் போதிய இட வசதி மற்றும் கட்டிடம் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் உள்ளன. ஆனால் 9,10-ம் வகுப்புகள் செயல்பட்டு வரும் இடத்தில் இடவசதி கழிவறை வசதிகள் இல்லை.

அரூர்: 20 ஆண்டுகளாக 2 வளாகங்களில் செயல்படும் அரசு பள்ளி - அடிப்படை வசதியில்லாமல் தவிக்கும் மாணவர்கள்
 
 இங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கழிப்பிடத்திற்கு செல்ல அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றுப்பகுதிக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் ஆற்றில் தண்ணீர் (தற்போது வெள்ள பெருக்கு) வரும் காலங்களில் மாணவர்கள் ஆற்றுப்பக்கம் சென்றால் தேவையில்லாத விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனால் இரண்டு வளாகங்களில் செய்ல்பட்டு வரும் கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியை,போதிய இடவசதியுடன் கூடிய, 6 முதல் 8 வரை செயல்படும் இடத்திற்கு மாற்றி தரவேண்டும் என கிராம மக்கள் பலமுறை அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே ஆசிரியர் மற்றும் மாணவகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒரே இடத்தில் உயர்நிலைப் பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget