மேலும் அறிய

உயிரிழந்த கோயில் காளைக்கு 7 கிராம மக்கள் சேர்ந்து இறுதிச்சடங்கு

’’காளை மாட்டுக்கு இறுதி சடங்குகள் மற்றும்  மேள தாளத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து நல்லடக்கம் செய்தனர்’’

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்திற்கு உட்பட்ட கரியம்பட்டி, செங்கனூர், உள்ளிட்ட 7 கிராமத்துக்கு தாய் கிராமமான நாயக்கனூர் கிராமத்தில், கோயில் கூலி (காளை) கடந்த 20 ஆண்டுகளாக வளர்த்து வந்தது. இந்த காளை வருடந்தோறும் 7 ஊர் சார்பாக நடைபெறும் எருது விடும் போட்டியில் முதன்மையாகவும் சிறப்பாகவும் பங்கேற்று வந்தது. மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் அன்பு காட்டும்,  இதனை கடவுளை வணங்குவது போல மக்கள் வணங்கி பாதுகாத்து வந்தனர். இதற்கு பொதுமக்கள் சார்பாக புல், தவிடு போன்ற தீவனங்கள், உணவுகள் தினந்தோறும் வழங்கப்பட்டு வந்துள்ளது. 
 

உயிரிழந்த கோயில் காளைக்கு 7 கிராம மக்கள் சேர்ந்து இறுதிச்சடங்கு
 
இந்தநிலையில் இந்த காளை உடல் குறைவால் இன்று திடீரென உயிரிழந்துள்ளது. இதனையடுத்து 7 ஊரை சேரந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் காளைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காளை மாட்டுக்கு இறுதி சடங்குகள் மற்றும்  மேள தாளத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து நல்லடக்கம் செய்தனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை இளைஞர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பரப்பி, தங்களது மன வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 

ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை அருகே புகுந்த ஒற்றை காட்டு யானை-காவிரி ஆற்றில் ஆனந்த குளியல்

 

உயிரிழந்த கோயில் காளைக்கு 7 கிராம மக்கள் சேர்ந்து இறுதிச்சடங்கு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை பகுதியில் இன்று அதிகாலை  காட்டு யானை ஒன்று தனியாக கிராமத்தை நோக்கி வந்துள்ளது. தொடர்ந்து ஒற்றை காட்டு யானை வருவதை கவனித்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து வனத் துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து காட்டு யானையை மீண்டும் வனப் பகுதியில் விரட்டினர். ஆனால் ஒற்றை யானை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நுழைந்தது. தொடர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து, ஆற்றில் பாறைகள் மேலே தெரிய ஆரம்பித்துள்ளதால், யானை காவிரி ஆற்றில் இறங்கி ஆனந்தமாக நீந்தி சென்றது. அப்போது பரிசலில் சென்றவர்கள் யானை வருவதை கண்டு அச்சமடைந்தனர்.
 

உயிரிழந்த கோயில் காளைக்கு 7 கிராம மக்கள் சேர்ந்து இறுதிச்சடங்கு
 
தொடர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக உள்ளதால்  கர்நாடக வனப் பகுதியில் இருந்த காட்டு யானை உணவு தேடி  கர்நாடக எல்லைப் மாறுகொட்டாய் பகுதியில் இருந்து தமிழக எல்லைப் பகுதியான ஊட்டமலை பகுதிக்கு ஆற்றை கடந்து வந்துள்ளது. ஒற்றை யானை வருவதை கண்ட பொதுமக்கள், ஊருக்குள் யானை நுழையும் முன்பு யானையை மீண்டும் காட்டுக்கு விரட்டியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் ஒற்றை யானை அடிக்கடி காவிரி ஆற்றில் தண்ணீர் அருந்த வருவதால், ஆலம்பாடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என தருமபுரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget