மேலும் அறிய

அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள் - அருந்ததியர் மக்கள் வேதனை

விளிம்பு நிலையில் இருப்பதால் தங்களை அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வருவதாக கூறி, இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தருமபுரி மாவட்டத்தில் அருந்ததியர் சமூக மக்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை அளவீடு செய்து, வீடு கட்டி தர வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் மனு அளித்தனர். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பெரிய போராட்டம் நடப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
 
தருமபுரி மாவட்டத்தில் ஜடையம்பட்டி, ஆட்டுக்காரன்பட்டி, கோயிலூரான் கொட்டாய், மிட்டா தின்ன அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் அருந்ததியர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 25 ஆண்டுகள் கடந்தும், இந்த வீட்டுமனை வழங்கப்பட்ட இடங்களை தனித்தனியாக அளவீடு செய்து கொடுக்காமல் வருவாய்த் துறையினர் காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதில் ஜடையம்பட்டியில் 1996 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதே போல் ஆட்டுக்காரப்பட்டியில் 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் தனிநபர் ஆக்கிரமிப்புகளாக அகற்றி அளவீடு செய்து கொடுக்காமல் இருந்து வந்துள்ளது.

அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள் - அருந்ததியர் மக்கள் வேதனை
 
மேலும் பாலக்கோடு அடுத்த கோவிலூரான் கொட்டாய் அருகே நான்குவழி சாலைக்காக சுங்கச் சாவடியை அமைக்க அருந்ததியர் சமூக மக்களின் வீடுகளை கையகப்படுத்தி உள்ளனர். அதற்கு போதிய இழப்பீடு வழங்கவில்லை என்றும், வேறு இடங்களில் மாற்றுப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.  அப்பொழுது இதனை அடுத்து மனு கொடுக்க வந்த 50-க்கும் மேற்பட்ட மக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி சந்தித்து பேசினார். அப்பொழுது ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தை அளவீடு செய்து கொடுப்பதாகவும், ஜடையம்பட்டி இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய இடத்தை வெள்ளிக்கிழமை தானே வந்து ஆய்வு செய்து உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
 
மேலும் பாலக்கோடு அருகே கோவிலூரான்கொட்டாய் கிராமத்தில் அருந்ததிர் மக்களின் இடங்களை சுங்கச்சாவடி அமைக்க எடுத்துக் கொண்ட விவகாரத்தில், கூடுதலாக இழப்பீடு வழங்குவதற்கு ஆவண செய்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வேறு இடங்களில் பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி அளித்துள்ளார். ஆனால் உறுதி அளித்தபடி மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கும் வராமல் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர் வந்திருந்தனர். விளிம்பு நிலையில் இருப்பதால் தங்களை அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வருவதாக கூறி, இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Embed widget