மேலும் அறிய

இல்லம் தேடிக் கல்வி திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தருமபுரி ஆட்சியர்

“இல்லம் தேடிக் கல்வித்“ திட்டத்தில் இணைந்து மாலை நேர வகுப்புகளை நடத்திட தகுதியான தன்னார்வலர்களை பதிவு செய்ய போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த கலைப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது’’

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ‘இல்லம் தேடிக் கல்வி” திட்டமானது பொது மக்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும், தன்னார்வலர்களிடத்திலும் மற்றும் பள்ளி, மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் பயனடையும் வகையில் இந்த திட்டத்தினை உடடியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்திடும் பொருட்டு தமிழக முதல்வர்  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், முதலியார் குப்பம் என்ற குடியிருப்பில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இன்று தருமபுரி மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து பொது மக்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும், தன்னார்வலர்களிடத்திலும் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மற்றும் மக்கள் வசிக்கும் அனைத்து குடியிருப்புகளுக்கும் நேரடியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 14 கலைக் குழுவினருக்கு 3 நாட்கள் பயிற்சி மாநில அளவில் பயிற்சி பெற்ற கலைஞர்களால் வழங்கப்பட்டுள்ளது.
 

இல்லம் தேடிக் கல்வி திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தருமபுரி  ஆட்சியர்
 
கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக கல்வியிழந்த 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு, மீண்டும் அவர்கள் இழந்த கல்வியை மீட்டெடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து  தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 1960 குடியிருப்பு பகுதிகளில் மாநில, மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கலைக் குழுவினரை கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி, அதன் வாயிலாக குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் கல்வியின் முக்கியதுவத்தை உணர்த்தி விழிப்புணர்வை இக் கலைக்குழு ஏற்படுத்தும். 
 

இல்லம் தேடிக் கல்வி திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தருமபுரி  ஆட்சியர்
 
மேலும் “இல்லம் தேடிக் கல்வித்“ திட்டத்தில் இணைந்து மாலை நேர வகுப்புகளை நடத்திட தகுதியான தன்னார்வலர்களை பதிவு செய்ய போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த கலைப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் ச.திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேள தளங்கள் முழங்க கரகாட்டம்,  மயிலாட்டம், தப்பாடடம், பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன்  இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு 14 வாகனங்க ஊர்வலமாக சென்றது. இந்த வானங்கள் தினமும் ஒவ்வொரு பகுதியாக சென்று கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி,  உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கல்வி துறை தொடர்புடைய அலுவலர்கள், இசை கலைஞர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget