மேலும் அறிய

தருமபுரி: தொப்பூர் அருகே ஸ்டீல் ரோல்கள் ஏற்றி வந்த லாரி தலைக்குப்புற விழுந்து விபத்து

’’கடந்த சில நாட்களுக்கு முன் இதே பகுதியில் அரிசி லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது’’

தருமபுரி மாவட்டம் தொப்பூர் பேருந்து நிலையம் அருகே சாலை சந்திப்பு பகுதியில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காகவும், வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காகவும், அடுத்தடுத்து பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் வருகின்ற அனைத்து வாகனங்களும் அதிவேகத்தில் வந்தாலும், தொப்பூர் பேருந்து நிலையம் பகுதியை கடக்கும் போது வேகத்தை குறைத்து மிக குறைந்த வேகத்திலேயே செல்ல அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு  இரும்பு ரோல்களை ஏற்றி வந்த லாரியை, ஓட்டுநர் ராஜி என்பவர் இயக்கி வந்தார். தொடர்ந்து இந்த லாரி தருமபுரி-சேலம் தேசிய  சாலையில் வந்து கொண்டிருந்த  போது, தொப்பூர் பேருந்து நிலைய சாலை சந்திப்பு அருகே அமைக்கப்பட்ட பேரி கார்டு பகுதியில் வளைவான இடத்தை கடக்கும் போது, அதிவேகமாக வந்ததால், ஓட்டுநரால் லாரியை கட்டுப்படுத்த முடியாவில்லை. 
 

தருமபுரி: தொப்பூர் அருகே ஸ்டீல் ரோல்கள் ஏற்றி வந்த லாரி தலைக்குப்புற விழுந்து விபத்து
 
தொடர்ந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தொப்பூர் பேருந்து நிலைய சாலை சந்திப்பிலேயே தலை குப்புற கவிழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் ராஜி சிறு காயங்களுடன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் லாரியில் இருந்த இரும்பு ரோல்கள் சாலையில் உருண்டு விழுந்தது. மேலும் லாரி சாலையின் குறுக்கே விழுந்ததால், தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் காவல் துறையினர் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் வரவழைத்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த லாரி மற்றும் இரும்பு ரோல்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

தருமபுரி: தொப்பூர் அருகே ஸ்டீல் ரோல்கள் ஏற்றி வந்த லாரி தலைக்குப்புற விழுந்து விபத்து
 
இந்த விபத்தால் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் பல்வேறு வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் அரிசி லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Embed widget