மேலும் அறிய

தருமபுரி: மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 9 பேர் கைது -1204 பாட்டில்களை பறிமுதல்

மிலாடி நபி பண்டிகை விடுமுறையால் தருமபுரி மாவட்டம் முழுவதும் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 9 பேரை கைது செய்து, 1204 பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல்

மிலாடி நபி பண்டிகையையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுபான கடை விடுமுறையை பயன்படுத்தி, அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தருமபுரி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள நூலஹள்ளி கிராமத்தில் சட்ட விரோதமாக அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, அதில் அதிக நெடியுடன் கூடிய திரவப் பொருளை கலந்து, மனித உடலுக்கு கேடு விளைவிக்கின்ற வகையிலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த நரசிம்மன்,  வடிவேல் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். 

தருமபுரி: மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 9 பேர் கைது -1204 பாட்டில்களை பறிமுதல்
 
தொடர்ந்து அவர்களிடமிருந்து தலா 52 மதுபாட்டில்கள் என 104 மதுபாட்டில்களை அதியமான்கோட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிப்பட்டி கிராமத்தில் அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த அன்பழகன் என்பவரை ஏ.பள்ளிப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து 401 அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் காரிமங்கலம் பகுதியில் சந்தோஷ், பச்சையப்பன் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 150 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
 

தருமபுரி: மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 9 பேர் கைது -1204 பாட்டில்களை பறிமுதல்
 
மேலும் தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று மிலாடி நபி பண்டிகையையொட்டி அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 37 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 1204 அரசு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதில் அதிகபட்சமாக காரிமங்கலம், அதியமான்கோட்டை மற்றும் ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லையில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்து, 900 பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சிலர் தலைமறைவாகியுள்ளார். தொடர்ந்து தலைமறைவானார்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் சந்து கடை மது விற்பனை செய்பவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆட்டோமேட்டிக் லாக் உயிரைப் பறித்ததா? - சேலம் கார் விபத்தில் கணவன், மனைவி பலியான அதிர்ச்சிப் பின்னணி
ஆட்டோமேட்டிக் லாக் உயிரைப் பறித்ததா? - சேலம் கார் விபத்தில் கணவன், மனைவி பலியான அதிர்ச்சிப் பின்னணி
Salem power shutdown: சேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... லிஸ்டில உங்க பகுதியும் இருக்கா ?
Salem power shutdown: சேலத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... லிஸ்டில உங்க பகுதியும் இருக்கா ?
இந்தியாவின் 2-வது மிக ஆபத்தான சாலை: தொப்பூரில் நவீன விபத்து தடுப்பு நடவடிக்கைகள்!
இந்தியாவின் 2-வது மிக ஆபத்தான சாலை: தொப்பூரில் நவீன விபத்து தடுப்பு நடவடிக்கைகள்!
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

15 நாட்கள்.. 25 கொலைகள்! POLICE உடன் திடீர் மீட்டிங்! ORDER போட்ட CM விஜய்
சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி
MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Horse Trading : ‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?
‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? சொல்ல காரணம் இதுதான்!
" அப்பா ஆட்சி நடப்பதாக உதயநிதி நினைக்கிறார் " அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பதிலடி
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
சொந்த ஊர் போறீங்களா? - பக்ரீத், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - டிக்கெட் புக் செய்வது எப்படி?
சொந்த ஊர் போறீங்களா? - பக்ரீத், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - டிக்கெட் புக் செய்வது எப்படி?
Embed widget