மேலும் அறிய

தருமபுரி: மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 9 பேர் கைது -1204 பாட்டில்களை பறிமுதல்

மிலாடி நபி பண்டிகை விடுமுறையால் தருமபுரி மாவட்டம் முழுவதும் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 9 பேரை கைது செய்து, 1204 பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல்

மிலாடி நபி பண்டிகையையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுபான கடை விடுமுறையை பயன்படுத்தி, அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தருமபுரி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள நூலஹள்ளி கிராமத்தில் சட்ட விரோதமாக அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, அதில் அதிக நெடியுடன் கூடிய திரவப் பொருளை கலந்து, மனித உடலுக்கு கேடு விளைவிக்கின்ற வகையிலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த நரசிம்மன்,  வடிவேல் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். 

தருமபுரி: மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 9 பேர் கைது -1204 பாட்டில்களை பறிமுதல்
 
தொடர்ந்து அவர்களிடமிருந்து தலா 52 மதுபாட்டில்கள் என 104 மதுபாட்டில்களை அதியமான்கோட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிப்பட்டி கிராமத்தில் அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த அன்பழகன் என்பவரை ஏ.பள்ளிப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து 401 அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் காரிமங்கலம் பகுதியில் சந்தோஷ், பச்சையப்பன் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 150 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
 

தருமபுரி: மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 9 பேர் கைது -1204 பாட்டில்களை பறிமுதல்
 
மேலும் தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று மிலாடி நபி பண்டிகையையொட்டி அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 37 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 1204 அரசு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதில் அதிகபட்சமாக காரிமங்கலம், அதியமான்கோட்டை மற்றும் ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லையில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்து, 900 பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சிலர் தலைமறைவாகியுள்ளார். தொடர்ந்து தலைமறைவானார்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் சந்து கடை மது விற்பனை செய்பவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Embed widget