மேலும் அறிய

சேலம் மாநகரில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் - குற்றங்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை

136 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா துவக்கி வைத்தார்.

சேலம் மாநகரத்தில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாநகரம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், குகை, அக்ரஹாரம், கடைவீதி, அஸ்தம்பட்டி, அழகாபுரம், 4 ரோடு, ஐந்து ரோடு, செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், ஜங்ஷன் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சிவதாபுரம், பூலாவரி, புத்தூர், உத்தமசோழபுரம், கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் 136 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா இன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து சிசிடிவி பொறுத்துவதற்கு உறுதுணையாக இருந்த தன்னார்வலர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு சிறப்பு பரிசுகளை வழங்கினார். 

சேலம் மாநகரில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் - குற்றங்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா கண்காணிப்பு கேமரா நிறுவுவதன் மூலம் அவைகள் 24 மணி நேரமும் தொடர்ந்து தனது பாதுகாப்பு பணியை செய்வதோடு, குற்றங்களை விரைவாக கண்டறிய பயன்படுகிறது. மேலும் அந்த பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும் எனவும், விரைவில் சேலம் மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில் அதிகப்படியான கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் மோகன்ராஜ், மாடசாமி, காவல் உதவி ஆணையாளர் ஆல்பர்ட் மற்றும் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

சேலம் மாநகரில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் - குற்றங்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை

சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பின் குற்றவாளிகளை எளிதில் கண்டறியப்படுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக சேலம் மாநகராட்சி பகுதியில் மூன்று இடங்கள் உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு நீண்ட நாட்களாக பல மாவட்டம் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த ஈரான் கொள்ளையர்கள் சேலத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டு அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் அடையாளம் கண்டறியப்பட்டு பின்னர் சிசிடிவி காட்சிகளில் பதிவாளர் அடையாளத்துடன் பெங்களூரில் பதுங்கியிருந்த ஈரான் கொள்ளையர்களை சேலம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget