மேலும் அறிய

சேலம் மாநகராட்சியில் ஊழல் நடைபெறுவதாக கூறி, உடல் முழுவதும் கரி பூசிக்கொண்டு நூதனமுறையில் மனு அளித்த நபரால் பரபரப்பு.

சிக்கன நாணய சங்கத்தின் மூலமாக பிடித்தம் செய்யப்படும் பணத்தில் ஊழல் செய்து தூய்மை பணியாளர்கள் மீது வட்டி அதிகளவில் போடுவதாக குற்றம்சாட்டினர்.

சேலம் மாநகராட்சியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வழங்குவதால், வாங்கிய கடன்களுக்கு பணம் செலுத்த முடியாமல் சிரமத்தில் உள்ளதாக கூறி, குணாளன் என்பவர் உடல் முழுவதும் கருப்பு நிறத்தை பூசிக்கொண்டு நூதனமுறையில் எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கினார். மேலும் சிக்கன நாணய சங்கத்தின் மூலமாக பிடித்தம் செய்யப்படும் பணத்தில் ஊழல் செய்து தூய்மை பணியாளர்கள் மீது வட்டி அதிகளவில் போடுவதாக குற்றம்சாட்டினர். குறிப்பாக காலம் தாழ்த்தி ஊதியம் வழங்குவதால் தூய்மை பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவித்தாார். மேலும் மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜ் மற்றும் நல அலுவலர் யோகநாத் ஆகியோர் மீது விசாரணை நடத்தி, இடமாற்றம் அல்லது பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில் ஊழல் நடைபெறுவதாக கூறி, உடல் முழுவதும் கரி பூசிக்கொண்டு நூதனமுறையில் மனு அளித்த நபரால் பரபரப்பு.

இதேபோன்று, சேலம் மாநகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு துவங்கியது. 13 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் இத்திட்ட பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பிரதான சாலையில் படுத்து உருண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாகவும், சீதலமடைந்த மற்றும் மேடுபள்ளமான சாலைகளை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாக மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற கோரி மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து சென்றனர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினரின் இந்த நூதன ஆர்ப்பாட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

சேலம் மாநகராட்சியில் ஊழல் நடைபெறுவதாக கூறி, உடல் முழுவதும் கரி பூசிக்கொண்டு நூதனமுறையில் மனு அளித்த நபரால் பரபரப்பு.

பின்னர், சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன் (29). பெயின்டிங் வேலை பார்த்து வந்த ரகுநாதன் மனைவி மகாலட்சுமி மற்றும் சசி (5), கிருத்திகா (2) என இரு பெண் குழந்தைகளும் உள்ளனர் ரகுநாதன் கடந்த தீபாவளி என்று அதே பகுதியை சேர்ந்த சிலருடன் ஏற்பட்ட முன் விரோதத்தால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேட்டூர் அரசு மருத்துவமனையிலேயே வைத்து ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் மனைவி மகாலட்சுமி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் பெண் குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விதவி உதவித்தொகை மற்றும் அரசு சார்பாக ஏதேனும் வேலை அளிக்க வேண்டும் என்று மனு அளிக்க வந்துள்ளார். அதனை வாங்கிய அதிகாரிகள் உனக்கெல்லாம் எப்படி அரசு வேலை கொடுக்க முடியும் என்று ஏளனமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வெளியே வந்த பெண் கணவனை அரசு மருத்துவமனையில் அனுமதித்து நிலையில் அரசு மருத்துவமனையிலேயே குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், பெண் குழந்தைகளுக்கு பால் வாங்க கூட காசு இல்லை என்பதால் தான் உதவி கேட்டு வந்தோம். ஆனால் உனக்கெல்லாம் எப்படி அரசு வேலை போட முடியும் என ஏளனமாக பேசுவதாக கூறி இரண்டு பெண் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget