மேலும் அறிய

சொத்துக் குவிப்பு வழக்கு: குடும்பத்தினர் 11 பேருடன் நீதிமன்றத்தில் ஆஜரான அதிமுக முன்னாள் அமைச்சர்!

டிசம்பர் 8-ம் தேதி 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், அப்பொழுது அவர்களுக்கு இந்த வழக்கு குற்ற பத்திரிக்கை வழங்கப்பட உள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக, தருமபுரி நீதிமன்றத்தில் இன்று குடும்பத்துடன் ஆஜரானார்.
 
அதிமுக முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் கடந்த 2016-21 வரை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி கே.பி.அன்பழகன் ஒரு லிட்டர் தொடர்புடைய 54 இடங்களில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவில் இலஞ்ச ஒழிப்பு துறையினர், பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பற்றினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.45.20 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இந்த சொத்து குவிப்பு வழக்கில் கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன் மற்றும் உறவினர்கள் என 11 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் 22-ம் தேதி போலீஸார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேதியாக ஜூலை 13-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

சொத்துக் குவிப்பு வழக்கு: குடும்பத்தினர் 11 பேருடன் நீதிமன்றத்தில் ஆஜரான அதிமுக முன்னாள் அமைச்சர்!
 
இந்நிலையில், இந்த வழக்கு தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இனி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் முறையாக சம்மன் அனுப்பப்பட்டு, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 11 பேர், தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
 
இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை வழக்கு விசாரணைக்காக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் தொடர்புடைய அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட பதினொரு பேரும் விசாரணைக்காக நீதி மன்றத்தில் ஆஜரானர். இந்நிலையில் மீண்டும் வழக்கு விசாரணை வருகிற டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் டிசம்பர் 8-ம் தேதி 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், அப்பொழுது அவர்களுக்கு இந்த வழக்கு குற்ற பத்திரிக்கை வழங்கப்பட உள்ளது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget