![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Child Marriage : சேலம் மாவட்டத்தில் பகீர்.. குழந்தை திருமண புள்ளிவிவரம்.. யுனிசெஃப் கொடுக்கும் அதிர்ச்சி தகவல்..
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.27 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த குழந்தை நல பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக யுனிசெப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
![Child Marriage : சேலம் மாவட்டத்தில் பகீர்.. குழந்தை திருமண புள்ளிவிவரம்.. யுனிசெஃப் கொடுக்கும் அதிர்ச்சி தகவல்.. 23.3 percent of child marriages are taking place in Salem, higher than the national average, according to a UNICEF study. Child Marriage : சேலம் மாவட்டத்தில் பகீர்.. குழந்தை திருமண புள்ளிவிவரம்.. யுனிசெஃப் கொடுக்கும் அதிர்ச்சி தகவல்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/21/72e57c8965172c4681384028d96804c51663763420103189_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் குழந்தைத் திருமணத் தடுப்பு குறித்து மாவட்ட அளவில் பத்திரிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலத்தில் இன்று நடத்தப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, தோழமை அமைப்பு, யுனிசெப் அமைப்புடன் இணைந்து நடத்திய இந்த பயிலரங்கினை யுனிசெப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர் குமரேசன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது மற்றும் குழந்தைத் திருமணத் தடுப்பில் ஊடகத்தினரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளங்களை முற்றிலுமாக தவிர்த்து செய்திகளை வெளியிடுவது மிக முக்கியமானதாக உள்ளது. மேலும் குழந்தைகளின் உரிமை சார்ந்த நிகழ்வுகளை பிரபலப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டை பொருத்தவரை நடுத்தர குடும்பங்கள், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் குழந்தைத் திருமணங்களை நடத்துவதில் ஆர்வமாக உள்ளனர். இதுவும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையாக பார்க்க வேண்டும். இதைத் தடுப்பதற்கான சூழல் தற்போது நன்றாக அமைந்துள்ளது.
இப்போதைய அரசு, சமூக நலத்துறை அமைச்சர் இதில் ஆர்வமாக உள்ளனர். இந்திய அளவில் முதல்முறையாக ஒருங்கிணைந்த குழந்தை நல பயிற்சி மையம் ரூ.27 கோடி மதிப்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் தேசிய அளவிலான சராசரியை விட 23.3 சதவீதம் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், இதைத் தடுப்பதற்கு ஊடகத்தினரும் தங்களுடைய பங்களிப்பை செலுத்த வேண்டும்" என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி,
கடந்த 2021 ஆம் ஆண்டில் குழந்தைத் திருமணம் தொடர்பாக 251 புகார்கள் வந்த நிலையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 289 புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக தமிழகத்தில் குழந்தை திருமணத்தில் சேலம் மாவட்ட முதலிடம் பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிக அளவில் கிராமப் பகுதியில் நடைபெற்றாலும், மாநகராட்சி பகுதியிலும் குழந்தை திருமணம் இன்றளவும் அதிகப்படியாக இருந்து வருகிறது. கோவிட்டுக்கு பிறகு குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன. இதைத் தடுப்பதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் 10 ஆயிரம் சுவர் விளம்பரங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவம், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரையும் ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணத்தில் தொடர்புடைய அனைவரையும் வர வைத்து ஒரு நாள் முழுவதும் கலந்தாய்வு வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைத் திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட 48 பெண் குழந்தைகளுக்கு தையல் பயிற்சி, மென்திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
சாலைகளில் குழந்தைகளை வைத்து யாசகம் கேட்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளை தாய்மார்கள் சுமந்து யாசகம் கேட்பது இன்றும் அதிக அளவில் நடந்து கொண்டுதான் உள்ளது ஊடகத்தின் உதவியோடு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
இந்நிகழ்ச்சியில், தோழமை அமைப்பின் இயக்குநர் தேவநேயன், சென்னை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் லாவண்யா கிரேஸ், வழக்கறிஞர்கள் சுப.தென்பாண்டியன், கிறிஸ்துராஜ், மூத்த பத்திரிக்கையாளர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)