மேலும் அறிய

சலூனில் நூலகம்... புத்தகம் வாசித்தால் தள்ளுபடி ஆஃபர்: அசத்தும் பொன்.மாரியப்பன்

முடி வெட்டினால் ரூ 80 கட்டணம், புத்தகம் வாசித்தால் கட்டணத்தில் ரூ 30 தள்ளுபடி

பொதுவாக சிகை அலங்கரிக்கும் கடையில் கவர்ச்சி நடிகைகள் படம், அரசியல் தலைவர் படம், அரசியல் பேச்சு, சினிமா பாடல்கள் உள்ளிட்டவைகளே அதிகளவில் பேசப்பட்டு விவாதிக்கப்படும். இது எதுவும் இல்லாமல் சுமார் 2500க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்ட நூலகம் அமைத்து சலூனில் வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கிறார் பொன்.மாரியப்பன். 


சலூனில் நூலகம்... புத்தகம் வாசித்தால் தள்ளுபடி ஆஃபர்: அசத்தும் பொன்.மாரியப்பன்

தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் பொன்.மாரியப்பன் இந்திரா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள், பொன்.மாரியப்பனின் தந்தையும் சலூன் தொழில் செய்து வந்துள்ளார் 8ஆம் வகுப்புக்கு மேல் பள்ளி செல்லாத பொன்.மாரியப்பன் தூத்துக்குடி வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்துள்ளார் அப்போது வழக்கறிஞர் படிப்பின் முக்கியத்துவத்தையும் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் சொல்ல படிக்க இயலாததை நினைத்து மன வேதனை அடைந்துள்ளார்.


சலூனில் நூலகம்... புத்தகம் வாசித்தால் தள்ளுபடி ஆஃபர்: அசத்தும் பொன்.மாரியப்பன்

இதனை தொடர்ந்து தங்களது தொழிலாளன முடித்திருத்தகத்தை இப்பகுதியில் அமைத்துள்ளார். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் பெரும்பாலும் கைப்பேசி வாட்ஸ் அப்பிலும் தொலைப்பேசியில் பேசி கொண்டும் இருப்பதை கண்ட அவர் வாடிக்கையாளர்களின் மனதை படிப்பின் அவசியத்தை அறிந்து கொள்ளவும் தேவையற்றதில் மூழ்காமல் இருக்கவும் தனது கடையில் நூலகத்தை அமைத்துள்ளார் பொன்.மாரியப்பன். கடையில் அரசியல் வேண்டாம் என்பதை நாசூக்காக வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் பொன்.மாரியப்பன், வாசிப்பின் மூலம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அறிமுகத்தை பெற்றுள்ளார். புத்தகங்களே துணை என்ற தலைப்பில் அவர் பேசிய ஒலிப்பதிவை சலூனில் ஒலிப்பரப்பிய அவர், தொடர்ந்து சுகி.சிவம், நெல்லை கண்ணன், தமிழருவி மணியன், பர்வீன் சுல்தானா ஆகியோரின் சொற்பொழிவுகளை தவறாமல் ஒலிப்பரப்பி வருகிறார். 


சலூனில் நூலகம்... புத்தகம் வாசித்தால் தள்ளுபடி ஆஃபர்: அசத்தும் பொன்.மாரியப்பன்

தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நூலகம் குறித்தும் என்ன புத்தகம் படித்தீர்கள் உபயோகமானதாக இருந்ததா என்பதை கையேடு மூலம் பதிவிடவும் செய்கிறார் பொன்.மாரியப்பன். இதனை பார்த்து பலரும் மாரியப்பனுக்கு புத்தகங்களை வாரி வழங்கி உதவினர். குறிப்பாக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, பொன்.மாரியப்பனின் சலூன் கடைக்கே சென்று அவரை பாராட்டியதுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய சுமார் 50 புத்தகங்களை வழங்கினார்.


சலூனில் நூலகம்... புத்தகம் வாசித்தால் தள்ளுபடி ஆஃபர்: அசத்தும் பொன்.மாரியப்பன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது கடைக்கு வந்து வாழ்த்தியதையும் நினைவு கூறும் பொன் மாரியப்பன், கடந்த 2020 ஆம் ஆண்டு வானொலியில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி முடித்திருத்தும் தொழிலாளி பொன்.மாரியப்பனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு தமிழில் உரையாடி பாராட்டினார். இந்த உரையாடல் வானொலியில் நாடு முழுவதும் ஒலிபரப்பானது.மாரியப்பன் எப்படி இருக்கீங்க எனத் தொடங்கிய பிரதமர் மோடி, சலூன் கடையில் நூலகம் வைக்கும் எண்ணம் எப்படி உங்களுக்கு தோன்றியது என வினவினார். இதற்கு பதிலளித்த மாரியப்பன், நான் 8-ம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். குடும்ப சூழ்நிலையால் அதற்கு மேல் படிக்க முடியவில்லை. சிறிய வயதிலேயே புத்தகங்களை அதிகம் படிப்பேன். எனது கடைக்கு வரும் இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நூலகத்தை தொடங்கினேன் என்றார் மாரியப்பன்.


சலூனில் நூலகம்... புத்தகம் வாசித்தால் தள்ளுபடி ஆஃபர்: அசத்தும் பொன்.மாரியப்பன்

தொடர்ந்து பேசிய பிரதமர், உங்களுக்கு பிடித்த புத்தகம் எது என கேட்கிறார். இதற்கு மாரியப்பன் திருக்குறள் என்கிறார். இதைக்கேட்டு மகிழ்ச்சி, வாழ்த்துகள் எனக்கூறி பிரதமர் தனது உரையாடலை நிறைவு நிறைவு செய்ததை குறிப்பிடும் இவர், பிரதமர் பாராட்டியதும் அதுவும் தமிழில் பேசியதும் எனது வாழ்வில் மறக்க இயலாத ஒன்றாகி விட்டது என்கிறார்.


சலூனில் நூலகம்... புத்தகம் வாசித்தால் தள்ளுபடி ஆஃபர்: அசத்தும் பொன்.மாரியப்பன்

நெல்லையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்ற பொன் மாரியப்பன்,அங்கு பல்வேறு தலைப்புகளில் உள்ள புத்தகங்களை சுமார் 5000 ரூபாய்க்கு வாங்கி தனது சலூன் கடை வாடிக்கையாளர்களின் வாசிப்புக்கு தீனி போடும் வகையில் வாங்கி வைத்துள்ளார். இதற்கு தனது தந்தையின் முழு ஒத்துழைப்பும் உள்ளது எனக் கூறும் பொன் மாரியப்பன் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் தன்னை ஊக்குவிப்பதாக கூறுகிறார், மகாகவி பாரதி தனது இறுதி வாழ்க்கையின் போது தனது மகள்களிடம் நான் சொத்து எதுவும் சேர்க்கவில்லை ஆனால் புத்தகங்களை எனது எழுத்துக்களை சேர்த்து வைத்துள்ளேன் இது உங்களுக்கு பிற்காலத்தில் உதவும் என பாரதி தெரிவித்ததாக கூறும் இவர் தனது பிள்ளைகளுக்கும் சொத்து சுகம் ஏதும் சேர்க்கவில்லை என்றாலும் புத்தகங்களை சேர்த்து வைத்துள்ளதாக பெருமையுடன் கூறுகிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vilathikulam murder : விளாத்திக்குளம் கொலை.! சிசிடிவியை ஆராய 10 நாட்களா.? சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை
விளாத்திக்குளம் கொலை.! சிசிடிவியை ஆராய 10 நாட்களா.? சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: ராமநாதபுரம் இளைஞர் கைது! அதிர்ச்சி தரும் காரணம் என்ன? தீவிர விசாரணை!
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: ராமநாதபுரம் இளைஞர் கைது! அதிர்ச்சி தரும் காரணம் என்ன? தீவிர விசாரணை!
Vilathikulam Case: திருட்டு, சதைத்துணுக்கு..விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி பாலியல் கொலை; குற்றவாளி சிக்கியது எப்படி?
Vilathikulam Case: திருட்டு, சதைத்துணுக்கு..விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி பாலியல் கொலை; குற்றவாளி சிக்கியது எப்படி?
Hormuz Sea Internet Cable: லட்டுல வெச்சேன்னு நினைச்சியா ட்ரம்ப்பே.! ஈரானிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம்; இது டேஞ்சரா இருக்கே.!
லட்டுல வெச்சேன்னு நினைச்சியா ட்ரம்ப்பே.! ஈரானிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம்; இது டேஞ்சரா இருக்கே.!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
Chennai Acid Attack | விவாகரத்து கேட்ட மனைவி ஆசிட் வீசிய கணவர் பதறவைக்கும் CCTV காட்சி
Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hormuz Sea Internet Cable: லட்டுல வெச்சேன்னு நினைச்சியா ட்ரம்ப்பே.! ஈரானிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம்; இது டேஞ்சரா இருக்கே.!
லட்டுல வெச்சேன்னு நினைச்சியா ட்ரம்ப்பே.! ஈரானிடம் இருக்கும் இன்னொரு ஆயுதம்; இது டேஞ்சரா இருக்கே.!
TN Election 2026 News LIVE: தமிழ்நாடு யாருக்கு? பரபரக்கும் சட்டமன்ற தேர்தல் களம்- இங்கே உடனடி அப்டேட்
TN Election 2026 News LIVE: தமிழ்நாடு யாருக்கு? பரபரக்கும் சட்டமன்ற தேர்தல் களம்- இங்கே உடனடி அப்டேட்
Crude Oil Price: ஐய்யோ பேச்சே.! போரால் கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை; அப்போ பெட்ரோல், டீசல்.?
ஐய்யோ பேச்சே.! போரால் கிடுகிடுவென உயரும் கச்சா எண்ணெய் விலை; அப்போ பெட்ரோல், டீசல்.?
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
NTK Election Manifesto: சீமான் அதிரடி; தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்; புதிய இட ஒதுக்கீடு- நாம் தமிழர் தேர்தல் அறிக்கை வெளியீடு
Ranjana Nachiyaar: பெண்களுக்கு பாதுகாப்பு.. திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. ஷாக்கில் தவெக!
Ranjana Nachiyaar: பெண்களுக்கு பாதுகாப்பு.. திமுகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்.. ஷாக்கில் தவெக!
Vilathikulam murder : விளாத்திக்குளம் கொலை.! சிசிடிவியை ஆராய 10 நாட்களா.? சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை
விளாத்திக்குளம் கொலை.! சிசிடிவியை ஆராய 10 நாட்களா.? சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை
ADMK alliance seat allocation : 36 தொகுதியா..? வாய்ப்பு இல்லை ராஜா.. 27 தொகுதி தான்- பாஜகவிடம் கறார் காட்டும் இபிஎஸ்- இன்று முடிவு
36 தொகுதியா..? வாய்ப்பு இல்லை ராஜா.. 27 தொகுதி தான்- பாஜகவிடம் கறார் காட்டும் இபிஎஸ்- இன்று முடிவு
Gold and silver rate today : ஒரே நாளில் தங்கம் விலை 2,160 ரூபாய் குறைந்தது. ! வெள்ளி விலை 10,000 சரிந்தது- நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
ஒரே நாளில் தங்கம் விலை 2,160 ரூபாய் குறைந்தது. ! வெள்ளி விலை 10,000 சரிந்தது- நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Embed widget