மேலும் அறிய

ஒன்றிய அரசு என குறிப்பிடப்படுவது ஏன்?

இந்திய அரசியல் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, குடியரசு நாடான  இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களையும் மற்றும் 9 ஆட்சிநில நிலப்பகுதிகள் மைய  மற்றும் மாநில  அரசுகளை ஒன்று இணைந்து செயல்படுவதாகும். அதன்படி அதிகார பகிர்வுகளில் மைய அரசுக்கு தேசிய அளவில் முக்கியமான துறைகளில் அதிகாரமும் , மாநில அரசுகளுக்கு மாநில அளவில் முக்கியமான துறைகளில் அதிகாரமும் பகிர்ந்து அளிக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார் .

சமீப காலமாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் நிதித்துறை அமைச்சர் PTR எனப்படும் பழனிவேல் தியாகராஜன் , இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதும் கடிதங்களில் இந்திய ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுள்ளதை அனைவரும் கவனித்து இருப்பீர்கள். இதில் பெரும்பான்மை ஆனவர்கள் ஏன் தமிழக முதல்வர், மத்திய அரசு என்று குறிப்பிடாமல் ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு இருக்கிறார் என்ற குழப்பத்திலும் சந்தேகத்திலும் உள்ளனர் . இது தற்பொழுது ஒரு பேசும் பொருளாகவே மாறி உள்ளது எனவும் கூறலாம்  .

இது தொடர்பாக நாம் ஒரு சட்ட வல்லுனரை தொடர்பு கொண்டபொழுது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி இந்திய அரசு பல மாநிலங்களை உள்ளடக்கிய 'ஒன்றிய அரசுதான்' என்று தெளிவாக குறிப்பிடுகின்றது. இந்திய நாடு 1947-ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்றபொழுது இந்திய டொமினியன், (Dominion of India ) என்று அழைக்கப்பெற்றது .

அதாவது டொமினியன் என்பதற்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த ஒரு நிலப்பகுதி, தற்பொழுது  சொந்த அரசாங்கமாக செயல்படும் தகுதி அடைந்த நாடாக அந்தஸ்தை பெற்றுள்ளது என்பது டொமினியோன்யனின் டொமினியனின் விளக்கம் ஆகும். இவ்வாறு  இந்திய டொமினியன் என்று அழைக்க பெற்ற சுகந்திர இந்தியா ஜனவரி மாதம் 26-ஆம் தேதி 1950-ஆம் ஆண்டு  புதிய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி குடியரசு நாடக தகுதி உயர்வு பெற்று டொமினியன் தகுதியில் இருந்து நீக்கப்பட்டது .

ஒன்றிய அரசு என குறிப்பிடப்படுவது ஏன்?
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கடிதம் 

 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு ஒன்றின்படி, “இந்தியா அல்லது பாரதம் பல மாநிலங்களின் ஒன்றமைப்பாகும்” என்று தெரிவிக்கின்றது. இந்திய அரசியல் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, குடியரசு நாடான  இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களையும் மற்றும் 9 ஆட்சிநிலப் நிலப்பகுதிகள் மைய மற்றும் மாநில அரசுகளை ஒன்று இணைந்து செயல் படுவது ஆகும் .

ஒன்றிய அரசு என குறிப்பிடப்படுவது ஏன்?

அதன்படி அதிகார பகிர்வுகளில் மைய அரசுக்கு தேசிய அளவில் முக்கியமான துறைகளில் அதிகாரமும் , மாநில அரசுகளுக்கு மாநில அளவில் முக்கியமான துறைகளில் அதிகாரமும் பகிர்ந்து அளிக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார். இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள், இந்தியா குடியரசு பெற்ற காலம் முதலே மைய அரசுகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முன்னிறுத்துகின்ற இரட்டை அரசாங்க முறை மற்றும் மாநில அரசுகளுக்கு கொடுத்திருக்கின்ற அதிகார பகிர்வு உள்ளிட்டவைகளை நசுக்கும் சர்வாதிகாரிகளாகவே செயல் பட்டு வருகின்றது அறிஞர் அண்ணா காலம் முதல் மாநில அரசுகளின் உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. 1962-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி மாநிலங்களவையில் தனது முதல் உரையை நிகழ்த்திய முன்னாள் தமிழக முதலமைச்சர் , மத்திய அரசிடம் வெளியுறவுத் துறை, பாதுகாப்பு, நிதி, ரயில்வே ஆகிய நான்கு துறைகள் மட்டுமே இருக்க வேண்டும் மற்ற கல்வி , மருத்துவம் உள்ளிட்ட துறைகள் அந்தந்த மாநில அரசுகளின்  கட்டுப்பாட்டில் இருந்தால் தான் இந்திய அரசியல் அமைப்பு முன்னிறுத்துகின்ற மைய , மாநில அரசுகளின் அதிகார பகிர்வு சமநிலை அடையும் என்று உரையாற்றினார்  .

ஒன்றிய அரசு என குறிப்பிடப்படுவது ஏன்?

அவரை தொடர்ந்து தமிழ்நாட்டை ஆண்ட பல முதல்வர்களும் மாநில அரசின் அதிகார பகிர்வுக்கு இன்றளவும் போராடி கொண்டுதான் உள்ளனர். இந்த நிலை தமிழ் நாட்டிற்கு மட்டும் இல்லை இந்தியா முழுவதும் உள்ள 28  மாநிலங்களிலும் இதே நிலை தான் உள்ளது. இந்தியா பல மாநிலங்களின் ஒன்றிணைப்பு என்பதை தற்பொழுது ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு உணர்த்தும் வகையில் தான் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் , ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுள்ளார்  என்று தெரிவித்தார், தியாகு .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
Embed widget