மேலும் அறிய

'ஈரான் மக்கள் போராட்டத்தில் நடப்பதென்ன?' சமூகவலைதளங்களில் துவங்கிய எதிர்ப்பு போராட்டம்!

முதலில் பெண்கள் தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக தலைமுடியை அறுத்து எதிர்ப்பினை பதிவு செய்யத் துவங்கினார்கள். அதனை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள ஈரானிய பெண்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்

நெருப்பின் சிறு பொறி மொத்த காட்டையே அழித்து சாம்பலாக்கும் வல்லமை கொண்டவை. அப்படியான ஒரு பொறியாகவே பார்க்கப்படுகிறது ஈரானில் இன்று அந்நாட்டின் அரசுக்கெதிராக நடைபெற்று வரும் போராட்டம். பர்க்கா சரியாக அணியாத குற்றத்திற்காக மராலிட்டி காவலர்களால் ( Morality police ) கைது செய்யப்பட்டு விசாரணையின் போதே உயிரிழந்தார் 22 வயதான மாஃஷா அமினி. அதன் தொடர்ச்சியாக தன்னெழுச்சியாக மராலிட்டி காவலர்களின் செயலினையும் அவர்களின் தொடர்ச்சியான அத்துமீறல்களையும் கண்டிக்கும் விதமாக போரட்டங்கள் நடைபெறத் துவங்கின. ஈரானின் வரலாற்றிலேயே பெண்களால் தொடங்கப்பட்டு நடத்தப்படும் மாபெரும் போராட்டமிது.

உயிரழந்த மாஃஷா அமினி, புகைப்படம் நன்றி _ Wikipedia
உயிரழந்த மாஃஷா அமினி, புகைப்படம் நன்றி _ Wikipedia

சமூகவலைதளங்களில் துவங்கிய எதிர்ப்பு போராட்டம்

முதலில் பெண்கள் தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக தலைமுடியை அறுத்து எதிர்ப்பினை பதிவு செய்யத் துவங்கினார்கள். அதனை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள ஈரானிய பெண்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். தங்கள் தலைமுடியினை அறுத்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதின் மூலமாக மாஃஷா அமினி-யின் மரணத்தினை உலகறியச் செய்ததோடு, மராலிட்டி காவல்துறையினரின் அத்துமீறல்களையும் விமர்சனத்திற்கு உள்ளாக்க தொடங்கினர். ஆரம்ப நிலையியே, மாஃஷா அமினியின் மரணம் காவல்துறையால் நிகழவில்லையென்றும் அவர் காவல்நிலையத்தில் தாக்கப்படவே இல்லையென்றும் அவரது இறப்பிற்கு காரணம், கைதுக்கு முன்பிருந்த உடல்நலக் கோளாறே என ஈரான் அரசு நிர்வாகம் மறுத்தது.

சுப்ரீம் லீடர் கமேனி , புகைப்படம் Courtesy :  Courtesy _ Wikipedia
சுப்ரீம் லீடர் கமேனி , புகைப்படம் Courtesy : Courtesy _ Wikipedia

மக்கள் போராட்டம்

முதலில் மாஃஷா அமினியின் நகரமான சாகேஸ்-ல் துவங்கிய போராட்டம் பின்னர் மக்கள் போராட்டமாக மாறி நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெறத் துவங்கியது. போராட்டங்கள் ஆரம்பமான போதே ஈரானிய அரசு அந்த போராட்டங்களை கடுமையான முறைகளில் தடுத்ததோடு மக்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாக போராட்டங்கள் ஈரான் முழுமைக்கும் பரவத் தொடங்கியதினை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயல அது வன்முறையாக மாறத் துவங்கியுள்ளது. காவல்துறையினர் மக்களை பொது இடங்களில் ஒன்று கூட தடைவிதித்து தீவிரமான கண்காணிப்பிற்கும் உள்ளாக்கி உள்ளனர்.

தீவிரமடையும் போராட்டம், புகைப்படம் - Picture Courtesy :  BBC
தீவிரமடையும் போராட்டம், புகைப்படம் - Picture Courtesy : BBC

மாணவர்கள் போராட்டம்

மக்களின் போராட்டம் தீவிரமானதை தொடர்ந்து ஈரான் முழுமைக்குமான கல்லூரி மாணவர்களும் பிரபல பல்கலைக் கழக மாணவர்களும் கல்லூரிகளுக்குள்ளும், பல்கலைக் கழகங்களுக்குள்ளும் அரசு எதிர்ப்பு போராட்டமாக மாற்றி போராடத் துவங்கினர். பள்ளிகளில் மாணவிகள் தங்களது தலை மறைப்பினை தூக்கியெறிந்து அரசுக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராக குரலெழுப்ப துவங்கியுள்ளனர். ஆனால் இத்தகைய போராட்டங்களை தற்போதைய ஈரானிய அரசு கிஞ்சித்தும் அனுமதிக்காததினாலும், போராட்டங்களை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தி கட்டுப்படுத்த முனைகிறது. ஆனால் இந்த போராட்டம் மாஃஷா அமினியின் மரணத்திற்கு நியாயம் கேட்கும் போராட்டம் மட்டுமல்ல. பல ஆண்டுகளாக மக்களின் மீது அதிகாரக்கரம் கொண்டும் அத்துமீறல்களையே வாடிக்கையாகக் கொண்டு நிகழ்த்தி வந்ததின் அழுத்தத்தின் வெடிப்பாகவே இந்த மக்கள் போராட்டம் அரசுக்கு எதிரான தீவிரமான போராட்டமாக மாறியுள்ளது.

போராட்டக் களத்தில் பெண்கள், புகைப்படம் - Picture via _ arabnews.com
போராட்டக் களத்தில் பெண்கள், புகைப்படம் - Picture via _ arabnews.com

சுப்ரீம் தலைவரின் பேச்சு

ஈரானின் சுப்ரீம் தலைவரான அயதுல்லா அலி கமேனி, மாஃஷா அமினியின் மரணம் ஒரு கசப்பான சம்பவம் எனவும் தன் இதயத்தில் ஆழமான காயத்தினை உண்டாக்கியுள்ளதாகவும் சொல்லும் அவர், மேலும் இந்த போராட்டங்கள் விரும்பத்தகாத நிகழ்வுகள் எனவும் இதனை ஈரானிய மக்கள் தானாக செய்யவில்லை என்றும் இதற்கு முக்கியமான காரணம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தூண்டுதலால் அவர்களின் அடிபொடிகளே வன்முறைக்கு காரணம் எனவும் கூறியுள்ளார். 

மாஃஷா அமினி, புகைப்படம் Thanks  _ Arabnews
மாஃஷா அமினி, புகைப்படம் Thanks _ Arabnews

இந்நிலையில் இந்த போராட்டங்களை அடக்குமுறையினால் மட்டுப்படுத்த முனையும் அரசு நிர்வாக்கத்தின் போக்கினால் குறைந்தது 100 பேர் வரை இறந்திருப்பதாக மனித உரிமை அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், சிலரது உடல்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக தகவல் குடும்பத்தினருக்கு சொல்லப்பட்டு, அவர்களது அனுமதியின்றி உடல்களை ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. மக்களின் போராட்டத்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு சட்ட ரீதியிலான தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே ஒரு முடிவினை ஏற்படுத்தும். இல்லையெனில் சில அரபு நாடுகளில் நடந்த மக்கள் புரட்சியின்      ( Arab spring protests ) விளைவாக ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களை போல நிகழ்வதற்கும் வாய்ப்பிருப்பதினை மறுப்பதற்கில்லை. சட்டங்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமேயொழிய மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால் அதனை தூக்கி எறிய மக்கள் முனைவார்கள் என்பதில் மாற்றில்லை.

  • அ.கார்த்திகேயபாலாஜி
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்டாக், மத்திய அரசு பதிலடி, சரித்திரம் படைத்த குரோக்கா  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்டாக், மத்திய அரசு பதிலடி, சரித்திரம் படைத்த குரோக்கா - 11 மணி வரை இன்று
Embed widget