மேலும் அறிய

MK Stalin : ’ஜெயிச்சுட்டுதான் அறிவாலயம் பக்கம் வரனும்’ மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

’உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் அதிக இடங்களை வென்று காட்டவில்லை என்றால் மாவட்ட செயலாளர் பொறுப்பும் அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கடும் எச்சரிக்கை

நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ’உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி’ என்ற முழக்கத்தை முன் வைத்து திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருப்பதால், உள்ளாட்சி தேர்தல் களத்தில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ‘வாஷ் அவுட்’ செய்ய வேண்டும் என்று களமாடிமாடிக்கொண்டிருக்கிறது.

MK Stalin :  ’ஜெயிச்சுட்டுதான் அறிவாலயம் பக்கம் வரனும்’ மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த  முதல்வர் மு.க. ஸ்டாலின்..!
 முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி முதல் காணொலி மூலமாக தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,  இந்த 8 மாதத்தில் செய்த சாதனைகளையும் கடந்த திமுக ஆட்சி காலங்களில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் செய்த திட்டங்களையும் கூறி வாக்கு சேகரிப்பதோடு, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து பேசிவருகிறார். குறிப்பாக நீட் விவகாரத்தில் பாஜக – அதிமுக துரோகத்தால்தான் மாணவர்களை பலிகொடுக்க வேண்டியதாயிற்று என்று பேசிவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களையும் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் பட்டியலிட்டு வருகிறார்.MK Stalin :  ’ஜெயிச்சுட்டுதான் அறிவாலயம் பக்கம் வரனும்’ மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த  முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது நடைபெற்ற கிராமப்புற உள்ளாட்சி தேர்தலிலேயே ஆளுங்கட்சியான அதிமுகவை விட அதிக இடங்களை கைப்பற்றியது. இப்போது, ஆளுங்கட்சியாகவும் இருப்பதால் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த பரிசு இது என எதிர்க்கட்சிகளுக்கு மெய்ப்பிக்க வேண்டிய நிலை திமுகவிற்கு ஏற்பட்டிருக்கிறது.

இதனால், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே அனைத்து மாவட்ட செயலாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இது ‘பிரஸ்டிஜ் இஸ்சு’ நம்ம ஆளுங்கட்சியாக வேறு இருக்கிறோம். இந்த தேர்தலில் பெரிய அளவில் வெற்றியை பெற்று காட்டிவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால், ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் பொறுப்பளர்களும் தங்கள் மாவட்டத்தில் அதிக இடங்களை பிடித்து காட்டிவிடவேண்டும் என்ற ‘வெறியோடு’ வேலைப்பார்க்க தொடங்கினர்.MK Stalin :  ’ஜெயிச்சுட்டுதான் அறிவாலயம் பக்கம் வரனும்’ மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த  முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராமநாதபுரம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் செயலாளர்களும் / சில இடங்களில் பொறுப்பு அமைச்சர்களில் சிலரும் சரியாக வேலை பார்க்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகார் வந்திருக்கிறது. இதனால், கடும் கோபமடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை தனது திண்டுக்கல் பரப்புரை கூட்டத்தை முடித்த கையோடு, ஒவ்வொரு மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள், பொறுப்பு அமைச்சர்கள் என அத்தனை பேரையும் தனித்தனியாக தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார்.MK Stalin :  ’ஜெயிச்சுட்டுதான் அறிவாலயம் பக்கம் வரனும்’ மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த  முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

அப்போது, ’இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் உங்களது மாவட்டத்தில் அதிக அளவில் வெற்றியை பெற வேண்டும். அப்படி அதிக இடங்களை கைப்பற்றி காட்டுபவர்கள் மட்டும் அறிவாலயம் பக்கம் வாருங்கள், முடியாதவர்கள் அப்படியே போய்விடுங்கள்’ என கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதோடு, மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிடுபவர்களின் மாவட்ட செயலாளர் பொறுப்பும் அமைச்சர் பத்வியும் பறிக்கப்படும் என்றும் பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிக இடங்களில் வென்று காட்டி அதிமுகவின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்றும் கொதித்திருக்கிறார்.MK Stalin :  ’ஜெயிச்சுட்டுதான் அறிவாலயம் பக்கம் வரனும்’ மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த  முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

இதனால், சரியாக வேலை பார்க்காத மாவட்ட செயலாளர்கள் சிலரும் பொறுப்பு அமைச்சர்கள் சிலரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். நம்முடைய பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய அடுத்த விநாடியே தங்கள் மாவட்டத்தின் நிர்வாகிகளை அழைத்து தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டிருக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget