மேலும் அறிய

ADMK: இதற்கு முன்பு அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளதா? வரலாறு சொல்வது இதுதான்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என்று அறிவித்திருப்பது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வியைச் சந்தித்து வரும் அ.தி.மு.க.வின் வேட்பாளர் இந்த தேர்தலில் யார? என்று பெரும் எதிர்பாரப்பு மக்கள் மத்தியில் இருந்தது.

தேர்தலை புறக்கணித்துள்ளதா அ.தி.மு.க.?

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அதிரடியாக அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், அ.தி.மு.க. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளதா? என்று பார்க்கலாம்.

அ.தி.மு.க. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி வகித்தபோது, 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க.வினர் இடைத்தேர்தலில் அராஜகம் செய்வதாக கூறி அந்த தேர்தல்களை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். அதேபோல, அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலையும் புறக்கணிப்பாக ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:

இந்த சூழலில், ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. அராஜகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ள அ.தி.மு.க.வினர் அதேபோல, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் தி.மு.க. செயல்படுவார்கள் என்று குற்றம் சாட்டியிருப்பதுடன் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டள்ள நிர்வாக திறனற்ற தி.மு.க. அரசில் நடக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் கோட்டைவிட்ட அ.தி.மு.க., சில தொகுதிகளில் டெபாசிட் இழந்ததுடன், சில தொகுதிகளில் 2வது இடத்தை பா.ஜ.க. கூட்டணியிடம் பறிகொடுத்தது. இது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலே இலக்கு என்றும் அ.தி.மு.க. அறிவித்துள்ளது. இந்த சூழலில், தொடர் தோல்வியை தவிர்ப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!

மேலும் படிக்க: Salem Leopard: வனத்துறையிடம் எட்டு நாட்களாக சிக்காத சிறுத்தை - பீதியில் சேலம் மக்கள்

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
அமித் ஷா கூட்டத்தைப் புறக்கணிக்கிறாரா ரங்கசாமி? -முன்னாள் முதல்வர் நாராயணசாமி பதிவால் பரபரப்பு!
அமித் ஷா கூட்டத்தைப் புறக்கணிக்கிறாரா ரங்கசாமி? -முன்னாள் முதல்வர் நாராயணசாமி பதிவால் பரபரப்பு!
அமித் ஷா தலைமையில் தென்மண்டல மாநாடு; ரங்கசாமி பங்கேற்காதது ஏன்?
அமித் ஷா தலைமையில் தென்மண்டல மாநாடு; ரங்கசாமி பங்கேற்காதது ஏன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget