மேலும் அறிய

Annamalai: “எவ்வித உள்நோக்கத்துடன் ரெய்டு நடக்கவில்லை” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!

பாஜக மாநில மையக் குழு கூட்டத்திற்கு பிறகு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். 

பாஜக மாநில மையக் குழு கூட்டத்திற்கு பிறகு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, “நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன. ரெய்டு உள்நோக்கத்துடன் நடக்கவில்லை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டால் மக்கள் பணம் வெளிவருகிறது.

தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழகம் போராட்ட களமாகியுள்ளது.” என்று கூறினார்.

அப்போது பேசிய அவர், “2024 ஆம் ஆண்டிற்கான எலக்சன் (தேர்தல்) பீவர் இன்னும் ஆரம்பிக்கவில்லை. தற்போதைக்கு மோடி அரசு மீது எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளே.

அது 2024 ஆம் ஆண்டில் நடைபெறும் தேர்தலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இல்லை. அதற்கான நேரம் வரும் பொழுது தெரியும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன.  அதற்கு முன்னதாக பாஜக செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அதற்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

அதை நோக்கித்தான் பாஜக சென்று கொண்டிருக்கிறது.  ஒரு அகில இந்திய கட்சியாக ஐந்து மாநில தேர்தல்களை எதிர் கொள்கிறோம். அதில் மூன்று முக்கியமான மாநிலங்கள் இந்தி பேச கூடிய மாநிலங்கள். அதை தவிர்த்து மிசோரம் மற்றும் தெலங்கான இருக்கிறது.  அதனால் இன்றைக்கு அதற்கான அவசரம் எதுவும் இல்லை.” என்றார்.

 2024 தேர்தலுக்காக, 10 மாதங்களாக, தேசிய அளவில், 161 தொகுதிகள், தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் தேர்வு செய்து பணிகள் நடைபெற்று  வருவது குறித்த கேள்விக்கு  பதிலளித்த அவர், ” அதே வேலையை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் செய்வோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேர்தலுக்கு இன்னும் 7, 8 மாதங்கள் இருப்பதால் வேட்பாளர்கள் குறித்து இப்போதைக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை. நாட்கள் அதிகம் இருப்பதால் அரசியல் சூழலும், களச் சூழலும் மாறும்.தமிழ்நாட்டில் நிறைய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியுள்ளது.

உதாரணத்திற்கு சமூக வலைத்தள நிர்வாகிகளை வீட்டுக்குள் புகுந்து இரண்டு, மூன்று மணிக்கு திமுக அரசு கைது செய்கிறது. அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்; கட்டமைப்பை இன்னும் வலிமைப்படுத்த வேண்டும். 

தமிழகத்தில் தொடர்ச்சியா ரைய்டு நடைபெற்று வருவதை நாம் பார்க்கிறோம். அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவுக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர். 

அதேபோல், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் மூன்று நான்கு நாட்களாக வருமானவரித் துறை சோதனை நடந்து வருகிறது.  அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், அதில் பெரும் அளவில் பறிமுதல் நடைபெற்றுள்ளது.

இதில் இருந்து தமிழ்நாட்டில் மக்கள் பணம் எந்த அளவுக்கு தனியார் பணமாக மாறியுள்ளது என்பதை காட்டுகிறது. தமிழ்நாட்டில் மக்கள் வரிப் பணத்தில் அரசியல்வாதிகள் வாழ்வது புதிதல்ல. ஆனால், தற்போது அமலாக்கத்துறையும், வருமானவரித் துறையும் மக்கள் மன்றத்தில் வெட்ட வெளிச்சமாக வைக்கிறார்கள்.

மக்கள் வரிப்பணத்தை ஒரு தனி மனித வருமனமாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது மட்டும் அல்லாமல் வருகின்ற காலங்களில் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ” என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். 

மேலும் படிக்க: கரூரில் அரசு பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி; ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்கள்

 

மேலும் படிக்க: உதயநிதியை பற்றி வாய் தவறி பேசிவிட்டேன் - பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ

 

தலைப்பு செய்திகள்

வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget