மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

உதயநிதியை பற்றி வாய் தவறி பேசிவிட்டேன் - பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ

முதல்வர் குறித்து அவதூறாக பேசியதற்கு பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு

கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் கடந்த மாதம் 19-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார் என்று கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் புகார் கொடுத்தார். அதன்பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை நீதிமன்றத்தில் குமரகுரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதலமைச்சர், அமைச்சர் குறித்து குமரகுரு எந்த இடத்தில் அவதூறாக பேசினாரோ, அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, அதில் முதலமைச்சர், அமைச்சர் குறித்து ஏற்கனவே பேசிய பேச்சுக்கு நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதன்பின்னர் அவருடைய முன்ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் 9-ந்தேதி (அதாவது நேற்று) அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான கூட்டம் மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை அதிமுக கூட்டம் நகர செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு கலந்து கொண்டு பேசினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும், கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று கூறினார். அதுபோல் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதற்கு ஒரு ரகசியம் உள்ளது என கூறினார். ஆனால் இதுவரை அந்த ரகசியத்தையும் சொல்லவில்லை, நீட் தேர்வையும் ரத்து செய்யவில்லை.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி ஒரே ஆண்டில் 4 மாவட்டங்களை பிரித்தார். 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை புரிந்துள்ளார். கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து இளம்பெண்கள், இளைஞர் பாசறை மாநாடும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்படும். நான் கடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "உதயநிதி ஸ்டாலினை பற்றி தவறாக ஒரு வார்த்தை வந்து விட்டது. தவறான வார்த்தை என தெரிந்தவுடன் நான் பேசிய வார்த்தை தவறு என சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்தேன்.

 அதனை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளனர். மேலும் நான் பேசிய வார்த்தை அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் அதற்கு இந்த கூட்டத்தின் மூலம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த காலத்திலும் அ.தி.மு.க. பேசும் வார்த்தை மற்றவர்கள் மனது புண்படும் வகையில் இருக்காது" என அவர் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - அமைச்சரவை இறுதியாகிறதா? நாயுடு - நிதிஷ் ஹாப்பியா?
NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - அமைச்சரவை இறுதியாகிறதா? நாயுடு - நிதிஷ் ஹாப்பியா?
Breaking News LIVE: காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
நள்ளிரவில் பெருஞ்சோகம்: கோயிலுக்கு சென்று திரும்பிய குடும்பம்: எமனாக வந்த லாரி; இருவர் உயிரிழப்பு ..!
நள்ளிரவில் பெருஞ்சோகம்: கோயிலுக்கு சென்று திரும்பிய குடும்பம்: எமனாக வந்த லாரி; இருவர் உயிரிழப்பு ..!
Trichy: சின்னத்தை மாற்றி ஓட்டுப்போட்ட திருச்சி மக்கள்? - சுயேட்சை வேட்பாளரால் வாக்குகளை இழந்தாரா துரை வைகோ?
சின்னத்தை மாற்றி ஓட்டுப்போட்ட திருச்சி மக்கள்? - சுயேட்சை வேட்பாளரால் வாக்குகளை இழந்தாரா துரை வைகோ?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Jagan Mohan Reddy vs Chandra Babu Naidu | ”ஆந்திராவில் வன்முறை TDP-யின் அட்டூழியம்” - ஜெகன் மோகன்Kangana Ranaut | கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! தாக்கிய CSIF பெண் அதிகாரி விமான நிலையத்தில் பரபரப்புLok sabha election ADMK | அதிமுகவை காலி செய்த EX அதிமுகவினர்! குழப்பத்தில் சீனியர்கள்Mayawati INDIA Bloc | மோடியை காப்பாற்றிய மாயாவதி! அந்த 16 தொகுதி இல்லன்னா... I.N.D.I.A ஆட்சிதான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - அமைச்சரவை இறுதியாகிறதா? நாயுடு - நிதிஷ் ஹாப்பியா?
NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - அமைச்சரவை இறுதியாகிறதா? நாயுடு - நிதிஷ் ஹாப்பியா?
Breaking News LIVE: காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
நள்ளிரவில் பெருஞ்சோகம்: கோயிலுக்கு சென்று திரும்பிய குடும்பம்: எமனாக வந்த லாரி; இருவர் உயிரிழப்பு ..!
நள்ளிரவில் பெருஞ்சோகம்: கோயிலுக்கு சென்று திரும்பிய குடும்பம்: எமனாக வந்த லாரி; இருவர் உயிரிழப்பு ..!
Trichy: சின்னத்தை மாற்றி ஓட்டுப்போட்ட திருச்சி மக்கள்? - சுயேட்சை வேட்பாளரால் வாக்குகளை இழந்தாரா துரை வைகோ?
சின்னத்தை மாற்றி ஓட்டுப்போட்ட திருச்சி மக்கள்? - சுயேட்சை வேட்பாளரால் வாக்குகளை இழந்தாரா துரை வைகோ?
TN Weather Update: விடிய விடிய கொட்டிய மழை.. காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
விடிய விடிய கொட்டிய மழை.. காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
Sunil Lahri: அயோத்தி மக்கள் சுயநலவாதிகள்... பாஜக தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத ராமாயணம் நடிகர்
Sunil Lahri: அயோத்தி மக்கள் சுயநலவாதிகள்... பாஜக தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத ராமாயணம் நடிகர்
Stock Market: மோடி 3.0 - 100 நாட்கள் தான்: இதில் முதலீடு பண்ணுனா ஜாக்பாட்! பங்குகளை பட்டியலிட்ட CLSA
Stock Market: மோடி 3.0 - 100 நாட்கள் தான்: இதில் முதலீடு பண்ணுனா ஜாக்பாட்! பங்குகளை பட்டியலிட்ட CLSA
வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: ஸ்டிக்கரால் போலீஸுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: ஸ்டிக்கரால் போலீஸுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Embed widget