மேலும் அறிய

வட மாநிலத்தவர்கள் பிரச்னையால் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றால் தமிழகத்தின் பொருளாதாரம் முடங்கிவிடும் - துரை வைகோ

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்கள் மீது வன்முறையும், தாக்குதலும் நடக்க பல வாய்ப்புகள் உள்ளதாக துரை வைகோ பேட்டி.

சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியில் மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், இந்தி பேசிய காரணத்திற்காக பீகாரை சேர்ந்த 15 இளைஞர்கள் தாக்கப்பட்டு உயிர் இழந்ததாக பொய்யான வதந்தியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதனால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பை குறிப்பிடுகிறேன். தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் ஏராளமானவை மூடப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுகளில் மீண்டும் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைகள் தமிழக முதல்வர் முயற்சியால் பல லட்சம் கோடி மதிப்பீட்டில் உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற்சாலைகள் துவங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து இடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலைகள், கட்டுமான தொழிற்சாலைகள் ஆகியவற்றில் 50 முதல் 75 சதவீதம் வெளிமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த தொழிற்சாலைகளும் முடங்குவதற்கு காரணமாக இருக்கும்.

வட மாநிலத்தவர்கள் பிரச்னையால் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றால் தமிழகத்தின் பொருளாதாரம் முடங்கிவிடும் - துரை வைகோ

தமிழகத்தில் தமிழ் தேசியம் என்று தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநில தொழிலாளர்களால் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறி வருகின்றனர். தமிழக இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.உடல் உழைப்பு தருகின்ற தொழில்களில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலில் தமிழக இளைஞர்கள் யாரும் ஈடுபட விரும்புவதில்லை இதை விட்டு உயர்தர வேலைகளுக்கு தமிழக இளைஞர்கள் சென்று விட்டனர். தமிழகத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் தமிழக தொழிற்சாலை முதலாளிகள் வடமாநிலத்தவர்களை வைத்து வேலை செய்து வருகின்றனர். தமிழக தொழிற்சாலைகளில் நிறைய இடங்களில் ஆட்கள் தேவை என்று போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. வடமாநில இளைஞர்களால் தான், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று தவறான பிம்பத்தை உருவாக்குகிறார்கள். உத்தரபிரதேச பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி பிரசாத் உமரோ, பாஸ்கர் மற்றும் தண்ணீர் போஸ்ட் உள்ளிட்ட பத்திரிக்கை தவறான வதந்திகளை பரப்பி வருகிறது. பிரசாத் உமரோவிற்கு இது முதல்முறை அல்ல, ஏற்கனவே பலமுறை தவறான வதந்திகளை தொடர்ந்து பரப்பியுள்ளார். இவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி கூறும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.அவர்கள் மீது வன்முறையும்,தாக்குதலும் நடக்க பல வாய்ப்புகள் உள்ளது. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி பொருளாதாரத்தை முடக்க பார்க்கிறார்கள்.தமிழர்கள் மீது வன்முறையை தூண்டும் வகையில் இது உள்ளது என்றும் பேசினார். தமிழ்நாட்டில் உள்ள சில நபர்கள் மீது தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படித்த இளைஞர், முன்னாள் காவல் அதிகாரி இது போன்ற கருத்துக்கள் சொல்வது தமிழகத்திற்கு துரதிஷ்டமான ஒன்று, தமிழக பாஜக தலைவர் தொடர்ந்து பல வதந்திகளை பரப்பி வருகிறார்.

வட மாநிலத்தவர்கள் பிரச்னையால் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றால் தமிழகத்தின் பொருளாதாரம் முடங்கிவிடும் - துரை வைகோ

கொரோனா காலத்தில் இருந்தது போன்று வட மாநில தொழிலாளர்கள், இந்த பிரச்னையால் புறப்பட்டு சொந்த மாநிலங்களுக்கு சென்றால் தமிழகத்தின் பொருளாதாரம் முடங்கிவிடும். தமிழகத்தில் நடைபெறும் குற்றசம்பவங்களில் வட மாநிலத்தில் இருந்து வரும் வாலிபர் சிலர் ஈடுபடுகிறார்கள். 100 சதவிதத்தில் 5 சதவீதம் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபடுகிறார்கள், அதிகமாக ஈடுபடவில்லை. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மீதமுள்ள குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை, 29 ஆயிரம் கோடி கடந்தாண்டை விட இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைவாய்ப்புக்கு பதில் 20 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அறிவித்து விட வேண்டும் என்று கூறினார். தமிழகத்திற்கு கலெக்டர் வேலைக்கு வடமாநில தொழிலாளர்கள் வரவில்லை, 365 நாட்கள் கடுமையாக உடல் உழைப்பை கொடுத்து வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள் அதை தவறாக கூற முடியாது” என்றார்.

 

மேலும், மதுவிலக்கை எதிரானது இந்த இயக்கம் தான் மதிமுக, வைகோவின் தாயார் நூறு வயதில் மதுவிற்கு எதிராக போராடி உயிரிழந்தார். எனவே ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் மதுபான கடைகள் இருக்கக் கூடாது என்று மக்கள் முடிவு செய்ய வேண்டும். மக்கள் நினைத்தால் மது கடைகளை முழுமையாக மூடலாம். அரசுக்கும் கடமை உள்ளது. அந்தந்த கிராம பஞ்சாயத்துகளில் பெண்கள் தெரிவித்து மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், முழுமையாக அரசை மட்டும் குறை சொல்ல முடியாது என்று கூறியவர், மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற மாற்றம் மக்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும், அவ்வாறு ஆரம்பித்தால் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் மாறுவார்கள் என்றும் பேசினார்.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் வரவேற்கக் கூடியது.இந்தியாவில் உள்ள அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வரும் பட்சத்தில் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுப்பது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Embed widget