![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kerala Blast: குண்டுவெடிப்பு சம்பவத்தை சாதாரண நிகழ்வாக கேரள அரசு கூறுகிறார்கள் - ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்
Kerala Blast: கேரளா குண்டுவெடிப்பு விவகாரத்தில் சாயத்தை பூசி விடக்கூடாது, அது தீவிரவாதிகளுக்கு ஊக்கத்தை கொடுத்து விடும் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி அளித்துள்ளார்.
![Kerala Blast: குண்டுவெடிப்பு சம்பவத்தை சாதாரண நிகழ்வாக கேரள அரசு கூறுகிறார்கள் - ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் Tamilisai Soundararajan should not apply dye, it will give encouragement to terrorists Kerala Blast: குண்டுவெடிப்பு சம்பவத்தை சாதாரண நிகழ்வாக கேரள அரசு கூறுகிறார்கள் - ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/13/0563bef4bd20307d7fa57e5ecca9e9c81681397309679224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பின்புலம் இருக்க வேண்டும்
சாயத்தை பூசி விடக்கூடாது
கேரள குண்டு வெடிப்பு எதிரொலி.. தமிழக எல்லைகளில் போலீசார் குவிப்பு..
கேரளாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில் மூன்று நாட்களாக யகோவா சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் பிரார்த்தனை கூட்டமானது நடைபெற்று வந்தது. இதில் இன்று காலை 9.30 மணியளவில் சுமார் 2000 பேர் அந்த இடத்தில் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அந்த மையத்தினுள் 3க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். இந்த குண்டு வெடிப்பு விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 36க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தலும் இன்னும் ஒரு வாரத்தில் ஐந்து மாநில தேர்தலும் நடத்தப்பட உள்ள நிலையில், கேரளாவில் நடந்த இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான நிலையில், கேரளா குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கேரள மாநில எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த தமிழ்நாடு டிஜிபி ஷங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் வனத்துறையினர், காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடம் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)