![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
‘நாளை தமிழகத்தை ஆள போவது உதயநிதி; 2024ல் பிரதமரை நிர்ணயிக்கப்போவது முதல்வர் ஸ்டாலின்’ - சொல்வது அமைச்சர் அன்பில் மகேஷ்
மயிலாடுதுறை அருகே நடைபெற்ற பொது கூட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்க போவது தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
![‘நாளை தமிழகத்தை ஆள போவது உதயநிதி; 2024ல் பிரதமரை நிர்ணயிக்கப்போவது முதல்வர் ஸ்டாலின்’ - சொல்வது அமைச்சர் அன்பில் மகேஷ் Tamil Nadu Chief Minister Stalin is going to decide the Prime Minister in the 2024 Parliamentary election Minister anbil mahesh poyyamozhi..! ‘நாளை தமிழகத்தை ஆள போவது உதயநிதி; 2024ல் பிரதமரை நிர்ணயிக்கப்போவது முதல்வர் ஸ்டாலின்’ - சொல்வது அமைச்சர் அன்பில் மகேஷ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/23/eb782c73ce3776b78092154aefe1a6c6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா திமுக சார்பில் தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவிலில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், தமிழகத்தில் முதல்வர் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது என்று தெரிவிக்கிறார். திராவிடம் என்றால், சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை, பெண் விடுதலை இப்படிபட்ட திராவிட மாடல் ஆட்சியை தான் தமிழகத்தில் நம் முதல்வர் பறைசாற்றி வருகிறார். இளைய சமுதாயத்தை பட்டை தீட்ட வேண்டும் என்ற குறிக்கோளை நிறைவேற்ற இளைஞரணி செயலாரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், நாளை தமிழகத்தை ஆள போகின்ற உதயநிதி ஸ்டாலின் திராவிட மாடல் பாசறைக் கூட்டத்தை நடத்துகிறார்.
AIADMK Meeting: சாம்பாரும் பொரியலும்தான்... மதிய உணவால் அப்செட் ஆன பொதுக்குழு உறுப்பினர்கள்!
சட்டமன்றத்தில் அமைச்சர்கள் முதலமைச்சரை பாராட்டி பேசினால் முதலமைச்சர் வெளியில் சென்று விடுவார். இல்லை என்றால் பேசும் அமைச்சரை திட்டத்தின் கருத்தை மட்டும் கூற சொல்வார். மக்கள் ஒட்டு போட்டு சட்டமன்றத்திற்கு அனுப்பிவைத்தது முதல்வரை பாராட்டுவதற்கு அல்ல, மக்களின் பிரச்னையை பேச மட்டும் தான் என்று கூறுவதால், தற்போது நாங்கள் முதலமைச்சரை பாராட்டுவது கிடையாது. ஆனால், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே தற்போது நமது முதல்வரை பாராட்டி வருகின்றனர். அந்தளவிற்கு சிறப்பான ஆட்சி தற்போது நடைபெற்று வருவகிறது. தலைமை கோபித்து கொள்ளும் என்பதற்காக பாஜக சட்டமன்ற உறுப்பினர் தங்களிடம் கூறிவிட்டு சட்டமன்றத் வெளிநடப்பு செய்கின்றனர். வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்க போவது நமது முதல்வர் தான்” என்று கூறினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பெண்களுக்கும் தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)