BREAKING: ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா பாதிப்பால் காலமானார்
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா பாதித்த நிலையில் இன்று காலை காலமானார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா பாதித்த நிலையில் இன்று காலை காலமானார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான இவர் வேட்புமனு தாக்கல் செய்த சில நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாசக்கோளாறு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைபெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மதுரை அப்போலோ மருத்துவமனையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். அதிமுக சார்பில் வேட்பாளர் திரு. மான்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூரில் அவரை எதிர்த்து போட்டியிட்டார்.
உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் பேட்டி கூறியதாவது. ஏற்கனவே மாதவராவிற்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு அதிகளவில் இருந்தது. 2 முறை கொரோனோ பரிசோதனை செய்ததில் கொரோனோ நெகட்டிவ் வந்துள்ளது. இருந்தாலும் கொரோனோ அறிகுறிகள் இருந்ததால் கொரோனோ பாதிப்பிற்கு அளிக்கும் சிகிச்சையை முழுமையாக வழங்கினோம்
நிமோனியா நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டதால் கவலைக்கிடமான நிலைக்கு சென்றார்அனுமதிக்கபட்ட கடந்த 20ம் தேதியிலிருந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர்.
Before You Go
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















