மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sellur Raju: "பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வோம்" - பச்சை கொடி காட்டும் செல்லூர் ராஜூ !
தனது செயலுக்கு ஓபிஎஸ், இபிஎஸ்சை சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி
![Sellur Raju: Sellur Raju Press Meet AIADMK Issue EPS vs OPS If separated people change their mind, we will accept them Sellur Raju:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/28/fee316704e77ae4d0561e2bd60da49ab_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செல்லூர் கே.ராஜூ
அ.தி.மு.க..,வின் கழக அமைப்பு செயலாளராக பதவி பெற்ற, முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து செல்லூர் கே.ராஜூ பேட்டியளிக்கும் போது "அ.தி.மு.க.,வில் பதவி கேட்காமலேயே எடப்பாடி பழனிசாமி எனக்கு கழக அமைப்பு செயலாளராக பதவி வழங்கியுள்ளார்.
#Admk-விலிருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் எற்றுக் கொள்ளவோம். தனது செயலுக்கு ஒ.பன்னீர் செல்வம், இ.பி.எஸ்சை சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். என மதுரையில் முன்னாள் அமைச்சர் @SellurKRajuoffl பேட்டி.@OfficeOfOPS | @EPSTamilNadu | @CVShanmugamofl pic.twitter.com/pIIhQApPYI
— Arunchinna (@iamarunchinna) July 15, 2022
அ.தி.மு.க.வுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நான் விசுவாசமாக செயல்படுவேன். நம்மை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என அம்மா தெரிவித்துள்ளார்.
![Sellur Raju:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/08/5a6d8381abb0921342a6d3b73d2abc841657271839_original.jpg)
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபடுவேன். அ.தி.மு.க., தொண்டரின் புனித ஸ்தலமாக தலைமை அலுவலகம் விளங்குகிறது. அப்படிப்பட்ட இடத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., ஒன்றுபட்டு இருக்கிறது. அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைய வேண்டும். அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்ளவோம். ஓ.பி.எஸ் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை. யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஓ.பி.எஸ் புரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க.,வில் சாதி ரீதியாக பதவி வழங்குவதில்லை. அதிமுகவில் சாதி இல்லை, ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருத்தம் தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி பின்னால் யார் வேண்டுமானாலும் வரலாம். அ.தி.மு.க.,வை நம்பியவர்கள் கெட்டதில்லை.
![Sellur Raju:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/29/a344cae948bd18b3c83e104ed41e7da2_original.jpeg)
அதிமுகவை நம்பாமல் கெட்டவர்கள் தான் உள்ளனர், ரவீந்திர நாத்தை நீக்கியதால் அ.தி.மு.க.,வுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கட்சியின் பலம் நிர்ணயம் செய்யப்படாது, தொண்டர்களின் பலமே அ.தி.மு.க" என கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion